உடன்கட்டை ஏறல்

உடன்கட்டை ஏறல் என்பது ஒரு இந்து சமயச் சடங்கு ஆகும். கணவனை இழந்த மனைவி தன் கணவரின் சடலம் தீ மூட்டப்படும் போது அந்தத் தீயில் தன்னை அழித்துக் கொள்ளுதல் உடன்கட்டை ஏறுதல் எனப்படுகிறது. சில சமயங்களில் மனைவி தானாக முன்வந்து தீயில் விழ்ந்து அழிந்து கொள்ளலாம். பிற நேரங்களில் மற்றவர் அவரை வற்புறுத்தி உடன்கட்டை ஏற வைப்பர்.

"இந்து சமயத்தை சேர்ந்த விதவைப் பெண் இறந்த கணவனுடன் எரிக்கப்படுதல்"

1815 இற்கும் 1818 இற்கம் இடைப்பட்ட காலத்தில் வங்காள மாநிலத்தில் உடன்கட்டை ஏறல் 378 இல் இருந்து 839 ஆக அதிகரித்தது. உடன்கட்டை ஏறலுக்கு எதிரான பரப்புரை கிறிஸ்தவ மறைபரப்புனர்களான வில்லியம் கேரி போன்றோரினதும், பிராமண இந்து சீர்திருத்தவாதிகளான இராசாராம் மோகன் ராய் போன்றோரினதும் பெரும் முயற்சியால், இந்தச் சடங்கு ஆங்கிலேயர் ஆட்சியில் 1829 ஆம் ஆண்டு சட்டத்துக்கு எதிரானதாக மாநில அளவில் ஆக்கப்பட்டது.[1][2][3]

இவற்றையும் பார்க்க

குறிப்புகள்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.