இரா. அன்பரசு
இரா. அன்பரசு (Era. Anbarasu, இறப்பு: 08 ஆகத்து, 2019)[1] இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். 1989 மற்றும் 1991 [2][3] ஆம் ஆண்டு நடந்தப் பொதுத்தேர்தல்களில் மத்திய சென்னை தொகுதியிலிருந்து இந்திய தேசிய காங்கிரஸ் வேட்பாளராக மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1980 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் செங்கல்பட்டு தொகுதியில் இருந்து இந்திய தேசிய காங்கிரசு(இந்திரா) வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[4]
அவரது மகன், டி. அருள் அன்பரசு, இந்திய தேசிய காங்கிரசின் (இந்திரா) உறுப்பினரானராவார். இவர் சோளிங்கர் தொகுதியிலிருந்து தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மேற்கோள்கள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.