இரண்டாம் நீதிமார்கன்

இரண்டாம் நீதிமார்கன்(907–921) என்பவன் ஒரு கங்க மன்னனாவான்

நுளம்பருடன் போர்

கங்கர்களுக்கு அடங்கிய சிற்றரசர்களாக நுளம்பர்கள் ஆண்டுவந்தனர். நுளம்ப மன்னன் மகேந்திரன் காலத்தில் கங்கர்களின் மேலாட்சியை ஏற்க மறுத்து தங்களது சுயாட்சியை அறிவித்தனர் இவர்களுக்குப் பல்லவர்களின் ஆதரவும் இருந்தது. பாணர்களை வென்றனர்.தங்களது எல்லையைத் தர்மபுரியிலிருந்து தொண்டை நாடுவரை விரிவாக்கினர். இறுதியில் நீதிமார்கனுக்கும் மகேந்திரனுக்கும் நடந்த போரில் மகேந்திரனை நீதிமார்கன் கொன்றான்.[1]

மேற்கோள்

  1. இரா.இராமகிருட்டிணன்,தகடூர் வரலாறும் பண்பாடும்.பக்.181,182.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.