இரண்டாம் உலக போருக்கு முந்தைய நிகழ்வுகள்

1922

ஏப்ரல்

ஏப்ரல் 3

ஜோசப் ஸ்டாலின் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கமிட்டியின் பொது செயலாளராக நியமிக்கப்படுகிறார்.

ஜூன்

ஜூன் 8

ஐரிஷ் உள்நாட்டு போர் தேசியவாதிகளின் இரு பிரிவினரிடையே துவங்குகிறது

செப்டம்பர்

செப்டம்பர் 18

ஹங்கேரி உலக நாடுகள் சங்கத்தில் இணைகிறது.

அக்டோபர்

அக்டோபர் 28

பாசிசவாதிகள் இத்தாலிய அரசாங்கத்தை கட்டுக்குள் கொண்டு வருகின்றனர். பெனிட்டோ முசோலினி பிரதம மந்திரி ஆகிறார்.

நவம்பர்

நவம்பர் 1

ஓட்டோமான் பேரரசின் ஆட்சி முடிவுக்கு வருகிறது.

டிசம்பர்

டிசம்பர் 6

ஆங்கில-ஐரிஷ் உடன்படிக்கை அமலுக்கு வருவதன் மூலம் அயர்லாந்து குடியரசு ஐக்கிய ராஜ்ஜியத்தில் இருந்து சுதந்திரம் பெறுகிறது.

டிசம்பர் 30

ரஷ்யா , உக்ரைன் , பெலாரஸ் மற்றும் Transcaucasia நாடுகள் இணைந்து சோவியத் யூனியனை உருவாக்குகின்றன.

1923

ஜனவரி

ஜனவரி 11

வெர்சாய் உடன்படிக்கையின்படி ஜெர்மனி செலுத்த வேண்டிய முதல் உலகப் போர் இழப்பீட்டுத் தொகையை பெற வேண்டி பிரான்சும் பெல்ஜியமும் ஜெர்மனியின் ரூர் பகுதியை ஆக்கிரமித்தன.

ஜூலை

ஜூலை 24

நவீன துருக்கியின் எல்லைகளை நிர்ணயிக்க லாசன்னே உடன்படிக்கை சுவிட்சர்லாந்தில் கிரீசு, பல்கேரியா மற்றும் முதல் உலகப்போரில் பங்கேற்ற மற்ற நாடுகளுக்கிடையில் கையெழுத்தானது.

அக்டோபர்

அக்டோபர் 29

ஓட்டோமான் பேரரசு கலைக்கப்பட்டு துருக்கி குடியரசு நாடாக உருவாகிறது

நவம்பர்

நவம்பர் 8

ஆட்சியை கைப்பற்ற அடோல்ப் ஹிட்லர் தலைமையில் நாட்சி கட்சி நடத்திய புரட்சி காவல் துறையினரால் முறியடிக்கப்படுகிறது.

1924

ஜனவரி

ஜனவரி 21

விளாடிமிர் லெனின் இறக்கிறார். ஜோசப் ஸ்டாலின் தனது அதிகாரத்தை நிலைநாட்ட எதிரிகளை அழிக்க தொடங்குகிறார்.

பிப்ரவரி

பிப்ரவரி 1

சோவியத் ஒன்றியம் ஐக்கிய ராஜ்ஜியத்தை அங்கீகரிக்கிறது.

ஏப்ரல்

ஏப்ரல் 1

அடோல்ப் ஹிட்லருக்கு அரசாங்கத்தை கவிழ்க்க சதி செய்த குற்றத்திற்காக ஐந்து வருட சிறைத் தண்டனை விதிக்கப்படுகிறது. (ஆயினும் அவர் ஒன்பது மாதங்கள் மட்டுமே சிறைத் தண்டனையை அனுபவித்தார்)

ஏப்ரல் 6

இத்தாலியில் பாசிஸ்ட் கட்சி 2/3 பெரும்பான்மையுடன் தேர்தலில் வெற்றி பெறுகிறது.

ஜூன்

ஜூன் 10

இத்தாலிய பாசிசவாதிகள் ரோமில் சோசலிச தலைவர் கியாகோமோ மட்டாட்டியை கடத்தி கொலை செய்கின்றனர்.

ஆகஸ்ட்

ஆகஸ்ட் 18

பிரான்ஸ் ஜெர்மனியில் இருந்து அதன் படைகளை திரும்பப் பெறத் தொடங்குகிறது.

1925

ஜனவரி

ஜனவரி 3

பெனிட்டோ முசோலினி இத்தாலியின் மீது தனது சர்வாதிகாரத்தை அறிவிக்கிறார்.

ஜூலை

ஜூலை 18

அடோல்ப் ஹிட்லரின் சுயசரிதை, மெயின் கேம்ப், வெளியிடப்படுகிறது.

டிசம்பர்

டிசம்பர் 1

முதல் உலகப்போரின் மேற்கு ஐரோப்பிய நேச நாடுகளுக்கும் முதல் உலகப்போருக்கு பிறகு புதிதாய் உருவான மத்திய மற்றும் கிழக்கு தேசங்களுக்கும் இடையில் லோகர்னோ உடன்படிக்கை கையெழுத்தானது.

1926

ஜனவரி

ஜனவரி 3

தியோடோரோஸ் பங்காலாஸ் தன்னை கிரீசு நாட்டின் சர்வாதிகாரியாக அறிவித்துக் கொள்கிறார்.

ஜனவரி 31

பிரிட்டிஷ் மற்றும் பெல்ஜிய துருப்புக்கள் ஜெர்மனியின் கோல்ன் பகுதியிலிருந்து வெளியேறுகின்றன.

பிப்ரவரி

பிப்ரவரி 25

பிரான்சிஸ்கோ பிரான்கோ ஸ்பெயின் நாட்டின் தலைமைப் பொறுப்பை ஏற்கிறார்.

ஏப்ரல்

ஏப்ரல் 4

கிரீசு நாட்டின் சர்வாதிகாரி தியோடோரோஸ் பங்காலாஸ் நாட்டின் அதிபராக தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

ஏப்ரல் 24

ஜெர்மனிக்கும் சோவியத் ஒன்றியத்துக்கும் இடையே பெர்லின் ஒப்பந்தம் கையெழுத்தாகிறது. இதன்படி இரண்டு நாடுகளில் எதாவது நாடு தாக்கப்பட்டால் அடுத்த நாடு நடுநிலை வகிக்கும்.

செப்டம்பர்

செப்டம்பர் 11

ஸ்பெயின் உலக நாடுகள் அமைப்பை விட்டு விலகுகிறது.

1927

ஜனவரி

ஜனவரி 19

ஐக்கிய ராஜ்ஜியம் தனது துருப்புக்களை சீனாவுக்கு அனுப்புகிறது.

பிப்ரவரி

பிப்ரவரி 12

பிரிட்டிஷ் துருப்புக்கள் ஷாங்காய் நகருக்குள் நுழைகின்றன.

பிப்ரவரி 19

பிரிட்டிஷ் நிலைப்பாட்டை எதிர்த்து ஷாங்காய் நகரில் போராட்டங்கள் தொடங்குகின்றன.

மார்ச்

மார்ச் 10

யுகோஸ்லாவியாவின் தாக்குதலை எதிர் பார்த்து அல்பேனியா தனது துருப்புக்களை எல்லை பகுதிகளுக்கு அனுப்புகிறது.

ஏப்ரல்

ஏப்ரல் 12

சீன உள்நாட்டுப்போர் தேசியவாதிகளுக்கும் பொதுவுடைமைவாதிகளுக்கும் இடையில் துவங்கியது.

மே

மே 20

ஐக்கிய ராஜ்ஜியத்திடமிருந்து சவூதி அரேபியா சுதந்திரம் பெறுகிறது.

மே 24

ஐக்கிய ராஜ்ஜியம் சோவியத் ஒன்றியத்துடனான இராஜதந்திர உறவுகளை துண்டித்து கொள்கிறது

ஜூன்

ஜூன் 4

யுகோஸ்லாவியா அல்பேனியாவுடனான இராஜதந்திர உறவுகளை துண்டித்து கொள்கிறது

ஜூன் 7

போலந்து நாட்டுக்கான சோவியத் தூதர் Pyotr Voykov படுகொலை செய்யப்படுகிறார்.

நவம்பர்

நவம்பர் 12

சோவியத் பொதுவுடைமைக் கட்சியிலிருந்து லியோன் திரொட்ஸ்கி வெளியேற்றப்படுகிறார்.

1928

மே

மே 3

ஜப்பான் மற்றும் சீனாவுக்கு இடையே ஜினான் நிகழ்வு தொடங்குகிறது.

ஜூன்

ஜூன் 4

ஹுவான்குடுன் ரயில் நிலையத்தில் சீன ஜனாதிபதி சாங் ஜுவோலின் ஜப்பான் உளவாளிகளால் படுகொலை செய்யப்படுகிறார்.

ஜூலை

ஜூலை 25

அமெரிக்க ஐக்கிய நாடு தனது துருப்புக்களை சீனாவிலிருந்து திரும்பப் பெறுகிறது.

ஆகஸ்ட்

ஆகஸ்ட் 2

இத்தாலியும் எத்தியோப்பியாவும் இத்தாலிய - எதியோப்பிய நல்லுறவு ஒப்பந்தம் செய்து கொள்கின்றன.

ஆகஸ்ட் 27

உலகின் சக்தி வாய்ந்த நாடுகளுக்கு இடையே கெல்லாக் - பிரயன்ட் ஒப்பந்தம் கையெழுத்தாகிறது.

1929

1930

1931

1932

1933

1934

1935

1936

1937

1938

1939

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.