இசுரேல் தேசம்

இசுரேல் தேசம் (எபிரேயம்: אֶרֶץ יִשְׂרָאֵל, Land of Israel) என்பது தென் மத்தியதரைக் கடலின் கிழக்கோர நிலப்பகுதியினால் சூழப்பட்ட பிரதேசத்தினைக் குறிக்கப்பயன்படும் பெயராகும். இது கானான், பாலஸ்தீனம், வாக்களிக்கப்பட்ட நாடு, அல்லது புனித பூமி எனவும் அழைக்கப்படும். சமய நம்பிக்கையுள்ள யூதர்கள் இப் பகுதி கடவுளால் யூத மக்களுக்கு உடைமையாக்கிக் கொள்ள கொடுக்கப்பட்டது என, தோராவின் அடிப்படையில், குறிப்பாக ஆதியாகமம், யாத்திரையாகமம் மற்றும் இறைவாக்கினர்களின் நூல்களின் அடிப்படையில் நம்புகின்றனர்.[1] ஆதியாகமத்தின்படி, கடவுளினால் ஆபிரகாமுக்கும், அவருடைய மகன் ஈசாக்குக்கும், அவருடைய மகன் யாக்கோபுக்கும், அவர்களின் சந்ததியினரான இசுரேலியர்களுக்குக் அத் தேசம் வாக்களிக்கப்பட்டது.[2]

எண்ணிக்கை 34, எசேக்கியேல் 47 ஆகியவற்றில் குறிப்பிடப்பட்டுள்ளபடி இசுரேல் தேசத்தின் எல்லைகள்.

உசாத்துணை

  1. "Exodus 6:4 I also established my covenant with them to give them the land of Canaan, where they resided as foreigners". Bible.cc. பார்த்த நாள் 2013-08-11.
  2. "Gen 15:18–21; NIV; - On that day the LORD made a covenant". Bible Gateway. பார்த்த நாள் 2013-08-11.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.