அழகப்ப செட்டியார் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி
அழகப்ப செட்டியார் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி (Alagappa Chettiar College of Engineering and Technology) தமிழ்நாடு காரைக்குடியில் அமைந்துள்ளது. காரைக்குடியைச் சேர்ந்த முனைவர் ஆர்.எம்.அழகப்ப செட்டியார் உருவாக்கிய பல கல்வி நிறுவனங்களில் இதுவும் ஒன்று.
அழகப்ப செட்டியார் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி | |
---|---|
![]() | |
நிறுவல்: | 1952 |
வகை: | அண்ணா பல்கலைக்கழகத்தின் ஒருங்கிணைந்த கல்லூரி |
அமைவிடம்: | காரைக்குடி, தமிழ்நாடு, இந்தியா |
இணையத்தளம்: | http://www.accet.net |
வரலாற்றுக் காலக்கோடு
- கல்லூரியின் பிரதான கட்டிடத்தை அன்றைய குடியரசுத்தலைவர் முனைவர் இராசேந்திர பிரசாத் 1953-ஆம் ஆண்டு பிப்ரவரி 19 அன்று அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
- 1969-ஆம் ஆண்டு இலத்திரனியல் மற்றும் தொலைத்தொடர்பு பொறியியல் (Electronics and Communication Engineering) துறைக்கான புலம் (faculty) தொடங்கப்பட்டது.
- 1983-ஆம் ஆண்டு நுண்ணலை மற்றும் ஒளியியல் பொறியியல் (Microwave and Optical Engineering) பட்டமேற்படிப்பு (M.E) தொடங்கப்பட்டது.
- 1988-ஆம் ஆண்டு கணிப்பொறி பயன்பாட்டியல் (Computer Application) பட்டமேற்படிப்பு (MCA) தொடங்கப்பட்டது.
- 2001-ஆம் ஆண்டு கணிப்பொறி அறிவியல் பொறியியல் படிப்பு (B.E Computer Science) தொடங்கப்பட்டது.
- 2001, டிசம்பர் 31 இல் அண்ணா பல்கலைக்கழகத்தின் ஒன்றிணைந்த கல்லூரியாக ஆக்கப்பட்டது.
- 2007-2008- ஆம் கல்வியாண்டு முதல் திருச்சி அண்ணா பல்கலைக்கழகத்தின் ஒன்றிணைந்த கல்லூரியாக ஆக்கப்பட்டது.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.