அலறல் (ஓவியம்)
அலறல் (ஓவியம்) (ஆங்கிலம்:The Scream) (நோர்வே: Skrik) நோர்வே நாட்டைச் சேர்ந்த குணச்சித்திர ஓவியரான எட்வர்ட் மண்ச் என்பவரால் வரையப்பட்டப் புகழ்பெற்ற ஒரு ஓவியமாகும். இந்த ஓவியம் 2012- ஆம் ஆண்டு மே மாதம் நடந்த ஏலத்தில் 119.9 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு விற்பனை செய்யப்பட்டது. 1895 ஆம் ஆண்டைச் சேர்ந்த இந்த ஓவியம், சோதபி என்ற நியூயோர்க் ஏலவிற்பனைக் கூடத்தில் அநாமதேய நபர் ஒருவரினால் வாங்கப்பட்டது. 40 மில்லியன் அமெரிக்க டாலர்களில் இருந்து ஏலம் ஆரம்பித்து 12 நிமிடங்களில் இந்த ஓவியம் விற்கப்பட்டது. இந்த விற்பனை மூலம் கிடைக்கப்பெற்ற நிதியைக் கொண்டு நோர்வேயில் புதிய அருங்காட்சியகம், உணவகம், கலைக்கூடம் ஆகியன அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது[1][2][3].
Skrik | |
![]() | |
ஓவியர் | எட்வர்ட் முஞ்ச் (Edvard Munch) |
---|---|
ஆண்டு | 1893 |
வகை | எண்ணை வர்ணம், சுவர்ப் பூச்சு, தடித்த அட்டையில் வண்ணத் தீட்டுக்கோல் |
பரிமாணம் | 91x73.5 |
இடம் | நேஷனல் காலரி, ஓஸ்லோ, ஓஸ்லோ, நார்வே |
மேற்கோள்கள்
- Edvard Munch's iconic artwork The Scream sold for $120m, பிபிசி, மே 3, 2012
- 'The Scream' sold for nearly $120 million, சிஎன்என், மே 3, 2012
- 'அலறல்' ஓவியம் 120 மில்லியன் டாலர்களுக்கு ஏலத்தில் விற்பனை
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.