அரநாழிகநேரம் (புதினம்)
அரநாழிகநேரம் (அரை நாழிகை நேரம்) என்பது மலையாள எழுத்தாளரான பாறப்புறத்து என்பவர் எழுதிய புதினம். இது 1967-ல் வெளியாகி, 1968-ல் கேரள சாகித்திய அக்காதமி விருது பெற்றது. [1]
நூலாசிரியர் | பாறப்புறத்து |
---|---|
நாடு | இந்தியா |
மொழி | மலையாளம் |
வெளியீட்டாளர் | டி. சி. புக்க்ஸ் |
பக்கங்கள் | 243 |
சி. போள் வர்க்கீஸ், டைம் டு டை என்ற பெயரில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். [2]
திரைப்படம்
இது இதே பெயரில் திரைப்படமாக்கப்பட்டது. கொட்டாரக்கர ஸ்ரீதரன் நாயர் இதன் முதன்மை கதாப்பாத்திரமான குஞ்ஞோனாச்சனாக வேடமிட்டார். இத்திரைப்படத்தில் "சமயமாம் ரதத்தில் ஞான் சுவர்க்கயாத்ரசெய்யுன்னு" என்று தொடங்கும் கிரிஸ்தவ பாடல் ஜி. தேவராஜனின் இசையமைப்பில், பி. லீலா, மாதுரி ஆகியோர் குரலில் வெளியானது.
சான்றுகள்
- http://www.mathrubhumi.com/books/awards.php?award=16
- University Librarieis, University of Washington, A Bibliography of Malayalam Literature in English Translation - http://www.lib.washington.edu/subject/southasia/guides/malayalam.htmlfic
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.