அமெரிக்க இலங்கை மிசன்

அமெரிக்க இலங்கை மிசன் (American Ceylon Mission, ACM) என்பது இலங்கையின் யாழ்ப்பாணத்தில் இயங்கி வந்த ஒரு கிறித்தவ மறைப்பரப்புனர் அமைப்பாகும். இவ்வமைப்பு "பிறநாடுகளுக்கு மறைப்பரப்புனரை அனுப்பும் அமெரிக்க அமைப்பினால்" (American Board of Commissioners for Foreign Missions, ABCFM) நிதியுதவி அளிக்கப்பட்டு 1813 ஆம் ஆண்டில் இலங்கை வந்த மதப்பரப்புனர்களால் ஆரம்பிக்கப்பட்டது. இந்திய, இலங்கை பிரித்தானியக் காலனித்துவ அரசு இவர்களை ஒப்பீட்டளவில் சிறிய யாழ்ப்பாணக் குடாநாட்டுக்கு மட்டுமே (ஏறத்தாழ 40 ஆண்டு காலத்திற்கு) வருவதற்கு அனுமதி அளித்தனர். இந்த மறைப்பரப்புனர்களின் தாக்கம் இலங்கையில் குறிப்பாக 1820கள் தொடக்கம் 20-ஆம் நூற்றாண்டின் தொடக்ககாலம் வரை இருந்து வந்தது. இக்காலப் பகுதியில், அவர்கள் கிறித்தவ மறைபரப்புடன், ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்பு, நூல்கள் அச்சிட்டு வெளியிடல், தொடக்க, மற்றும் உயர் கல்விக்கூடங்கள் நிறுவுதல், யாழ் குடாநாட்டு மக்களுக்கு அடிப்படை மருத்துவ வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல் போன்ற சமூக சேவைகளிலும் ஈடுபட்டனர். உள்ளூர் சமய, மற்றும் சடங்குகளுக்கு எதிரான தமது பரப்புரைகளை பிரசுரங்கள் வாயிலாக வெளியிட்டனர். இந்நடவடிக்கைகள் இலங்கைத் தமிழர் வாழ்வில் பெரும் சமூக மாற்றங்களை ஏற்படுத்தியது. இம்மாற்றங்கள் அவர்களின் வாழ்வில் இன்றளவும் தொடர்கின்றன. யாழ்ப்பாணக் குடாநாட்டில் இன்றுள்ள குறிப்பிடத்தக்க சில கல்வி, மருத்துவ நிலையங்கள் அமெரிக்க மிசனரிகளின் உதவியுடன் நிறுவப்பட்டவையே.[1]

யாழ்ப்பாணத்தில் அமெரிக்க இலங்கை மிசனைச் சேர்ந்த சில மறைப்பரப்புனர்கள், 1890கள்

வரலாறு

பட்டிக்கோட்டா செமினறி

இவற்றையும் பார்க்க

மேற்கோள்கள்

  1. Hoole, Ratnajeevan (2002-03-21). "The first modern Asian University". மூல முகவரியிலிருந்து 16 November 2007 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2007-10-31.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.