இலங்கையில் சீர்திருத்தத் திருச்சபை

ஒல்லாந்தர் ஆட்சிக்காலத்தின்போது சீர்திருத்தத் திருச்சபை இலங்கைக்கு அறிமுகமாகியது. இலங்கையை பிரித்தானியர் ஆட்சி செய்ய ஆரம்பித்தபோது அங்கிலிக்க மற்றும் ஏனைய சீர்திருத்தத் திருச்சபை நற்செய்தி அறிவிப்பாளர்கள் 1ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இலங்கையை வந்தடைந்தனர். ஏறக்குறை 160,518 பேர் (சனத்தொகையில் 0.8%) சீர்திருத்தத் திருச்சபையைச் சேர்ந்தவர்களாகவுள்ளனர்.

இரட்சணிய சேனை இலங்கையில் உறுதியாகவுள்ளது. இலங்கை லூத்தரன் சபை 1200 அங்கத்தவர்களைக் கொண்டுள்ளது. இலங்கையில் சீர்திருத்தத் திருச்சபையின் வருடாந்த வளர்ச்சி கிட்டத்தட்ட 3.9% ஆகும்.

சமயக் காரணங்களுக்காக கிறித்தவர்களுக்கு எதிரான வன்முறை இடம்பெறுகிறது. 1980 களில் 43 வீத சீர்திருத்தத் திருச்சபையைச் சேர்ந்தவர்கள் சிங்களவர்களாகவிருந்தனர்.[1]

இவற்றையும் பார்க்க

References

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.