அனந்தசயனம்

திருப்பாற்கடலில் அனந்தன் எனும் இந்திரலோகத்து தேவன், ஆதிசேஷன் எனும் ஆயிரம் தலைகொண்ட நாக வடிவு கொண்டு, அதன் மேல் விஷ்ணு யோகநித்திரை கொள்வதையே அனந்த சயனம் என்பர். [1]. [2]]வைகுந்தத்தில் திருப்பாற்கடல் இருப்பதாகவும், அதில் ஆதிசேஷனை பாயாக்கி, யோக நித்திரையில் விஷ்ணு உறங்குவதாகவும் இந்து புராணங்கள் கூறுகின்றன.[3]

ஆதிசேஷன் மீது அனந்த சயன கோலத்தில் விஷ்ணு

திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயிலில் விஷ்ணுவிற்கு அனந்தசயனம் என்ற பெயரும் உண்டு. அனந்த பத்மநாப சாமியின் இருப்பிடம் என்பதால் இப்பெயர் பெற்றது.

மேற்கோள்கள்

இதனையும் காண்க

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.