அடோனிஸ்
அலி அஹமது செயித் (ஆங்கிலம்:Ali Ahmed Said, பிறப்பு:1930) அல்லது பிரபலமாக பேனைப் பெயர் அடோனிஸ் ஒரு சிரிய கவிஞர் ஆவார்.
ஆரம்ப வாழ்க்கை
1950 இல் டமஸ்க்ஸ் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். 1956 இல் லெபனானுக்கு நாடுகடத்தப்பட்டார். 1957 இல் லெபனியக் கவிஞர் யூஸுஃவ் அல்-க்ஹால் (Yusuf al-Khal) என்பவருடன் இணைந்து ஒரு பதிப்பகத்தை நிறுவினார். 1968 இல் மௌஃவிகிஃவ் (Mawfiqif) என்னும் அரபுக் கவிதைச் சஞ்சிகையத் தொடங்கினார்.
படைப்புகள்
மஹ்மூட் தர்வீஷ், அடோனிஸ், சமிஹ் அல் காசிம் (Samih al Qusim) ஆகிய மூவரது கவிதைகளையுங் கொண்ட தொகுதியின்று 'ஒரு தேசப்படத்திற்குப் பலியானோர்' (Victims of a Map) என்ற தலைப்பில் 1984 இல் வெளியானது. அடோனிஸின் கவிதைகளிற் சில சி. சிவசேகரத்தால் மொழிபெயர்க்கப்பட்டு பாலை என்ற தலைப்பில் தேசிய கலை இலக்கியப் பேரவை வெளியீடாக 1999 இல் வெளிவந்தது.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.