திருமாணிக்குழி வாமனபுரீசுவரர் கோயில்

திருமாணிகுழி - திருமாணி வாமனபுரீஸ்வரர் கோயில் சம்பந்தர் பாடல் பெற்ற தலமாகும். இது தென் ஆற்காட்டு மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் நடுநாட்டு தலங்களில் ஒன்றாகும். [1]

தேவாரம் பாடல் பெற்ற
திருமாணிக்குழி வாமனபுரீசுவரர் கோயில்
பெயர்
புராண பெயர்(கள்):திருமாணிக்குழி
அமைவிடம்
ஊர்:திருமாணிக்குழி
மாவட்டம்:கடலூர்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:வாமனபுரீஸ்வரர், மாணிக்கவரதர்
தாயார்:அம்புஜாட்சி, மாணிக்கவல்லி
தல விருட்சம்:கொன்றை
தீர்த்தம்:சுவேத, கெடில நதி
பாடல்
பாடல் வகை:தேவாரம்
பாடியவர்கள்:சம்பந்தர்
வரலாறு
தொன்மை:1000-2000 வருடங்களுக்கு முன்

அமைவிடம்

இக்கோயில் திருப்பாதிரிப்புலியூர் பேருந்து நிலையத்திலிருந்து திருவகீந்திபுரம் வழியாக பானூர், பண்ருட்டி செல்லும் சாலையில் திருவகீந்திரபுரத்திற்கு அடுத்தபடியாக சுந்தர்பாடி என்னுமிடத்திற்கு அருகிலுள்ள சாத்தாங்குப்பம் வழிகாட்டி செல்லும் சாலையில் கெடில நதிப்பாலத்தை அடுத்து சிறிது தூரத்தில் அமைந்துள்ளது. [1]

சிறப்பு

திருமால் பிரமச்சாரியாக வந்து மாவலிபால் மூன்றடி மண்கேட்டு அவனையழித்த பழிதீர வழிபட்ட தலம் என்பது ஐதிகம்.

மேற்கோள்கள்

  1. பு.மா.ஜெயசெந்தில்நாதன், திருமுறைத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009

இவற்றையும் பார்க்க

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.