ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா

ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலத்தை மையமாகக் கொண்டு தொடங்கப்பட்ட அரசியல் கட்சியாகும். சிபு சோரன் இதன் தலைவராக இருந்து வருகிறார். இதன் தேர்தல் சின்னம் வில்-அம்பு. பதினேழாவது மக்களவையில் இக்கட்சிக்கு ஒரு உறுப்பினர் உள்ளனர்.

Jharkhand Mukti Morcha
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா
தலைவர்சிபு சோரன்
தலைவர்ஹேமந்த் சோரன்
தொடக்கம்1972
தலைமையகம்பாரியடு சாலை, ராஞ்சி-834008
இளைஞர் அமைப்புஜார்க்கண்ட் யுவ மோர்ச்சா
கொள்கைமாநில நலன் சார்ந்தது
இ.தே.ஆ நிலைமாநில அரசியல் கட்சி[1]
கூட்டணிதேசகூ (2013 வரை)
ஐமுகூ (2014),(2018-தற்போது)
மக்களவை உறுப்பினர்கள் எண்.,
1 / 545
சட்டமன்ற உறுப்பினர்கள் எண்.,
30 / 81
தேர்தல் சின்னம்
இணையதளம்
www.jharkhandmuktimorcha.org

2014 சார்க்கண்ட் சட்டமன்றத் தேர்தல்

2014ஆம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் 19 தொகுதிகளில் வென்றது.

2019 சார்க்கண்ட் சட்டமன்றத் தேர்தல்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்தும் போட்டியிட்டன. இதில் காங்கிரஸ், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, ராஷ்ட்ரிய ஜனாதா தளம் கூட்டணி 47 இடங்களில் வெற்றி பெற்றன. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி 30 இடங்களிலும், .காங்கிரஸ் கட்சி 16 இடங்களிலும் ராஷ்ட்ரீய ஜனதாதளம் 1 இடங்களிலும் வெற்றி பெற்றன.

29 திசம்பர் 2019, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவர் ஹேமந்த் சோரன் முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்டார்

  1. "List of Political Parties and Election Symbols main Notification Dated 18.01.2013". India: Election Commission of India (2013). பார்த்த நாள் 9 May 2013.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.