விஸ்வகர்மா (சாதி)
விஸ்வகர்மா என்று இந்த இனம் , அல்லது சாதி என்றும் வைத்துக்கொள்ளாம். இவர்களை கருமார், கன்னார், தச்சர், சிற்பி, தட்டார் என்றும், மேலும் கம்மாளர்,கம்சாலா பத்தர், ஆசாரி, என்றும் கூறுவர். சரியாக சொல்வது என்றால், ஐந்து விதமான தொழில் செய்பவர்கள் இவர்கள். இரும்புத்தொழில் - கொல்லர், பாத்திரவேலை - கன்னார், மரவேலை - தச்சர், சிற்பவேலை - சிற்பி, தங்கநகைத் தொழில் - பொற்கொல்லர், தட்டார், எனவும் குறிப்பிடுவார்கள். தொழில் அடிப்படையில்தான் இந்த ஜாதிப் பெயர் வந்தது என்று சொல்லலாம். மேலும் விஸ்வகர்மா என்றால், விஸ்வம் என்றால் உலகம் , கர்மா என்றால் செயல்,தொழில் அல்லது வினை என்று அர்த்தம். எனவே விஸ்வகர்மா என்றால் உலகில் செயல் புரிபவர்கள் என்று அர்த்தமாகும்.விஸ்வகர்மா என்றும் விஸ்வகர்மாலா என்றும் அழைத்துக்கொள்கின்றனர். தமிழ்நாடு சாதிகள் பட்டியலில் பிற்படுத்தப்பட்டோரில் பிரிவு எண் 65, வரிசை எண் 42 ஆகியவற்றில் உள்ளனர்.[1] தமிழ்நாட்டில் இவர்கள் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் பேசக்கூடிய இருபிரிவினர்களாக உள்ளனர்.