வில்லியம் திரேசி
வில்லியம் திரேசி (1807 - 1877) என்பவர் ஒரு கிறித்தவ மத போதகர். இவர் அமெரிக்காவில் கனெடிகட் மாகாணத்தில் பிறந்தவர். இவர் கிறித்தவ வேத சாத்திரங்களைக் கற்று 1837-ல் இந்தியா வந்து பணியாற்றினார். மதுரை மாவட்டம், திருமங்கலம், பசுமலை ஆகிய ஊர்களில் பணிபுரிந்தார். இவர் பணியின் போது 32 சபைகளை உருவாக்கினார். இவர் எழுதிய “வேதாகம பிரசித்த விருத்தாந்தம்” எனும் நூல் 1888 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.