வில் யாழ்
வில் யாழ் என்பது வில் வடிவில் அமைந்த யாழ் ஆகும். இது ஏழு, ஒரே அளவான, வில் போன்று வளைக்கப்பட்ட மரக் கொம்புகளையும், மர நார்களை நாணாகவும் கொண்டு அமைக்கப்பட்டிருக்கும். மரக் கொம்பாக குமிழ மரமும் (Gmelina asiatica), மர நாராக மரள் மருள் (Sansevieria roxburghiana) மரத்தின் நாரும் பயன்படுத்தப்பட்டன.[1]
பெரும்பாணாற்றுப்படையில் வில் யாழ் பற்றிய குறிப்பு:
... இன்றீம் பாலை முனையிற் குமிழின்
புழல்கோட்டுத் தொடுத்த மரல்புரி நரம்பின்
வில்யாழ் இசைக்கும் விரலெறி குறிஞ்சிப் ...
உசாத்துணை
- சுவாமி விபுலானந்தர். யாழ் நூல். கரந்தைத் தமிழ்க்கல்லூரி.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.