விரோசனன்
விரோசனன் (Virochana) (சமக்கிருதம்: विरोचन), அசுர குல மன்னரான இரணியகசிபின் பேரனும்; பிரகலாதனின் மகனும் ஆவர்.
விரோசனன் | |
---|---|
தகவல் | |
பிள்ளைகள் | மகாபலி சக்கரவர்த்தி |
அதர்ண வேதத்தில் (VIII.10.22) பிரகலாதனின் மகனாக விரோசனனை குறிப்பிடுகிறது.[1] சாந்தோக்கிய உபநிடதத்தின் படி (VIII.7.2-8.5), அசுரர் தலைவன் விரோசனனும், தேவர்களின் தலைவன் இந்திரனும் ஆத்ம தத்துவத்தை அறிய பிரம்மனிடம் 32 ஆண்டுகள் சீடர்களாக குருகுலக் கல்வியைப் பயின்றனர். குருகுலக் கல்வி முடிவில், விரோசனன், தன் உடலே இறைவன் என்று தவறாக உணர்ந்து பூஜித்தான்.[2] விரோசனனின் மகன் மகாபலி சக்கரவர்த்தி ஆவார்.[3]
மகாபாரதக் குறிப்புகள்
மகாபாரதத்தின், உத்தியோகப் பருவத்தில், கேசினி என்ற அசுர குலப் பெண்ணை விரும்பிய, விரோசனனுக்கும், சூதன்வான் என்பவனுக்கு நடந்த போட்டியில், பிரகலாதன் நடுவராக இருந்து, சூதன்வானே வெற்றி பெற்றவர் என தீர்ப்பு வழங்கினார். [4]
மேற்கோள்கள்
- Griffith, Ralph T.H. (1895). "Hymns of the Atharva Veda, Book 8, Hymn 10". The Internet Sacred Text Archive website. பார்த்த நாள் 2009-11-12.
- "Chandogya Upanishad" 151–2. Maharishi University of Management website. பார்த்த நாள் 2009-11-12.
- Gopal, Madan (1990). K.S. Gautam. ed. India through the ages. Publication Division, Ministry of Information and Broadcasting, Government of India. பக். 75.
- பிரகலாதன் தீர்ப்பு! - உத்யோக பர்வம் பகுதி 35அ
முன்னர் பிரகலாதன் |
தைத்தியன் அறியப்படவில்லை |
பின்னர் மகாபலி சக்கரவர்த்தி |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.