வானூர்தி நிலையம்
விமான நிலையம் அல்லது வானூர்தி நிலையம் அல்லது பறப்பகம் என்பது பறனைகள் (விமானங்கள்) அல்லது உலங்கூர்திகள் வானேறவோ தரையிறங்கவோ அமைக்கப்பட்ட இடம் ஆகும். வானூர்திகள் வானூர்தி நிலையங்களில் பராமரிக்கப்படலாம். வானூர்திகள் வானூர்தி நிலையங்களில் வானூர்திகள் ஏறவும் இறங்குவதற்குமான ஓடுபாதை, அல்லது உலங்கூர்தித்தளம் (helipad), முனையங்கள், பராமரிப்புக் கூடாரங்கள் (hangars), வான்வழிகாட்டகக் கோபுரங்கள் (Air Traffic Control Towers) போன்றவை அமைகின்றன.
பெரிய வானூர்தி நிலையங்களில் உணவகங்கள், ஓய்விடங்கள், ஏற்றிடங்கள் (airport ramp/apron), அவசர சேவைகள் ஆகியவையும் அமையும். ராணுவப் பயனிற்கு மட்டும் அமைக்கப்படும் வானிலையங்கள் வான்தளம் (airforce base/air-base) எனப்படுகின்றன.
ஆய்வுகள்
விமான நிலையத்தின் அருகில் வசிப்பவர்கள், அல்லது விமான ஒலி அதிகமாக இருக்கும் பகுதியில் வசிப்பவர்களுக்கு இதய நோய் அல்லது ஸ்ட்ரோக் எனப்படும் மூளைக்கு ரத்தம் எடுத்துச் செல்லும் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு மூளை செயலிழக்கும் வாய்ப்பு அதிகம் காணப்படுவதாக பிரிட்டனில் நடத்தப்பட்ட மருத்துவ ஆய்வொன்று தெரிவிக்கிறது.[1] இந்த ஆய்வை மேற்கு இலண்டனில் உள்ள ஹீத்ரோ விமான நிலையத்தில் வசிக்கும் 35 இலட்சம் மக்களிடம் நடத்தப்பட்டுள்ளது. இதற்கு விமான ஒலி மனிதர்களின் இரத்த அழுத்தத்தை அதிகப்படுத்துவதே காரணம் என்கின்றனர் ஆய்வாளர்கள்.