வானவரம்பன்
வானவரம்பன் எனச் சேர மன்னர்கள் சிறப்பிக்கப்பட்டுள்ளனர். ”வானவரம்பன் நன்னாட்டு உம்பர்” (தமிழர் பொருள் தேடச் சென்றனர்).[1]
- பதிற்றுப்பத்து ஆறாம்பத்தின் தலைவன் ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் [2] [3]
- பகைவர் கோட்டையை நொறுக்கியபின் (குட்டம் தொலைய வேலிட்டு கடல்பிறக்கு ஓட்டிய செங்குட்டுவன்) [4]
- வெளியத்தை ஆண்ட சேரமன்னன் வானவரம்பன் [5]
- சேரமான் பெருஞ்சோற்று உதியஞ்சேரலாதன் [6]
ஆகியோர் வானவரம்பன் எனப் போற்றப்பட்டுள்ளனர்.
மேலும் பார்க்க
அடிக்குறிப்பு
- அகம் 389
- பதிற்றுப்பத்து 58
- பதிற்றுப்பத்து பதிகம் 6
- கடல்கால் கிளர்ந்த வென்றி நல்வேல் வானவரம்பன் அடல்முனைக் கலங்கிய உடைமதில் ஓர் அரண் போல (தூங்காமல் கிடக்கிறேன் என்கிறாள் ஒரு தலைவி) - அகம் 45
- வெளியத்து அன்ன (தலைவி நலம்) - அகம் 359
- வான வரம்பனை நீயோ பெரும எனச் சேரமான் பெருஞ்சோற்று உதியஞ்சேரலாதனை முரஞ்சியூர் முடிநாகராயர் என்னும் புலவர் விளிக்கிறார் - புறம் 2
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.