வரணி மத்திய கல்லூரி
வரணி மத்திய கல்லூரி கொடிகாமம் - பருத்தித்துறை வீதியில் வரணி என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது. இங்கு தரம் 1 முதல் உயர்தரம் வரையான வகுப்புக்கள் உள்ளன. உயர்தரத்தில் கலைப்பிரிவு மற்றும் வர்த்தகப் பிரிவுகள் உள்ளன. இங்கிருந்து ஆண்டு தோறும் குறிப்பிடத்தக்க மாணவர்கள் பல்கலைக்கழகம் தெரிவாகிறார்கள். எம்.டி.பண்டா என்பவரால் 11-01-1954 இல் திறந்துவைக்கப்பட்டது. இப்பாடசாலையில் 1963 ஆம் ஆண்டு முதல் க.பொ.த.உயர்தர வகுப்பில் விஞ்ஞானக்கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது. 1967 ஆம் ஆண்டு கல்வியமைச்சு ஒரு விளையாட்டு மைதானத்தை அமைத்துக்கொடுத்தது. உடையார் சிவா நல்லமாப்பாணர் இப்பாடசாலைக்கு வணக்க மண்டபம் ஒன்றை அமைத்துக்கொடுத்தார்.
![]() |
இந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். |
யா/வரணி மத்திய கல்லூரி | |
---|---|
![]() | |
அமைவிடம் | |
வரணி யாழ்ப்பாணம், இலங்கை | |
தகவல் | |
வகை | அரசுப் பள்ளி |
தொடக்கம் | 1954 |
தரங்கள் | 1–13 |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.