வன்னி (மரம்)
வன்னி (Prosopis cineraria அல்லது Prosopis spicigera) என்பது ஆப்கானித்தான், ஈரான், இந்தியா, ஓமான், பாக்கித்தான், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், யெமன் உட்பட மேற்காசியாவிலும் தெற்காசியாவிலும் காணப்படும், அவரையினங்களைச் சேர்ந்த ஒரு பூக்கும் மரமாகும். இது பிற்காலத்தில் இந்தோனேசியாவில் அறிமுகப்படுத்தப்பட்டு, விரவிக் காணப்படுகிறது.[1] இது பல பெயர்களால் இடத்துக்கிடம் அழைக்கப்படுகிறது. அரபியில் கஃப் என்றும்,[2] இராச்சசுத்தான் மொழியில் சங்ரி என்றும், பஞ்சாபியில் ஜந்த்[1] என்றும், சிந்தியில் கண்டி என்றும், கன்னடத்தில் வ(b)ன்னி என்றும், சௌங்கிரா[1], ஜந்த்/ஜந்தி, கர்,[1] கெஜ்ரி/கெஜ்ரா,[1] சமி, ஷமி ஆகிய பெயர்களால் மராத்தியிலும் இந்தியிலும்[3] சும்ரி என்று குஜராத்தியிலும் அழைக்கப்படுகிறது.
வன்னி | |
---|---|
![]() | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | தாவரம் |
தரப்படுத்தப்படாத: | பூக்கும் தாவரம் |
தரப்படுத்தப்படாத: | மெய்யிருவித்திலையி |
தரப்படுத்தப்படாத: | Rosids |
வரிசை: | Fabales |
குடும்பம்: | பபேசியே |
பேரினம்: | Prosopis |
இனம்: | P. cineraria |
இருசொற் பெயரீடு | |
Prosopis cineraria (லி.) துரூசு | |
வேறு பெயர்கள் | |
Adenanthera aculeata Roxb.[1] |
இது இந்தியாவின் இராச்சசுத்தான் மாநிலத்தின் மாநில மரமும், பாக்கித்தானின் சிந்து மாகாணத்தின் மாகாண மரமும் ஆகும். இதன் 400 ஆண்டுகளுக்கும் மேல் பழைமையானவை என நன்கறியப்பட்ட மிகப் பெரும் மரங்கள் பஹ்ரைன் நாட்டின் பாலைவனங்களில், நீர் அரிதாகக் கிடைத்த நிலையிலுங்கூட ஓங்கி வளர்ந்திருக்கின்றன.
வன்னி மரம், பல்வேறு சிறப்புகளை உடைய மரம். வன்னி மரம் வன்னிய இன மக்களின் புனித மரமாகும். சோழ மன்னர்களின் குல மரம் என்னும் சிறப்பு உடையது என்பதனை தஞ்சை பெரியகோவிலிலும், கங்கைகொண்ட சோழபுரத்திலுள்ள 1000 ஆண்டு பழைமையான இம்மரத்தின் மூலம் அறியலாம்.
உசாத்துணை
- "Prosopis cineraria (L.) Druce". Catalogue of Life. Integrated Taxonomic Information System and Species2000 (2012-03-15). பார்த்த நாள் 2012-03-21.
- "Prosopis cineraria (L.) Druce". Germplasm Resources Information Network. United States Department of Agriculture (2006-01-27). பார்த்த நாள் 2009-12-31.
- "Prosopis cineraria". AgroForestryTree Database. World Agroforestry Centre. பார்த்த நாள் 2012-03-21.