வடக்கு நிலங்கள்
ஜில்ஜிட்-பால்டிஸ்தான் அல்லது நடுவண் நிர்வாகத்தில் வடக்கு நிலங்கள்(ஆங்: Federally Administered Northern Areas, உருது: شمالی علاقہ جات) இந்தியா வடக்கில் அமைந்த ஓர் அரசியல் பிரிவு ஆகும். இப்பகுதியின் தலைநகரம் கில்கித். மொத்தத்தில் 1.5 மில்லியன் மக்கள் இப்பகுதியில் வசிக்கின்றனர். 1970இல் இந்த அரசியல் பிரிவு உருவாக்கப்பட்டது. இது கில்கித் மற்றும் பல்திஸ்தான் என இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது.[1] வடக்கில் ஆப்கானிஸ்தான், வடகிழக்கில் சீன மக்கள் குடியரசு, தென்கிழக்கில் இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலம் அமைந்தன.
நடுவண் நிர்வாகத்தில் வடக்கு நிலங்கள் ஜில்ஜிட்-பால்டிஸ்தான் | |
![]() |
![]() |
தலைநகரம் • அமைவிடம் |
கில்கித் • 35.35°N 75.9°E |
மக்கள் தொகை (2003) • மக்களடர்த்தி |
15,00,000 (மதிப்பிடு) • 20.7/km² |
பரப்பளவு |
72 971 கிமீ² |
நேர வலயம் | PST (UTC+5) |
மொழிகள் | உருது (தேசிய) ஷினா (ஆட்சி) பல்ட்டி வாக்கி கஜுனா கோவார் |
பிரிவு | சார்ப்பான பகுதி |
• மாவட்டங்கள் | • 6 |
• ஊர்கள் | • 7 |
• ஒன்றியச் சபைகள் | • |
தொடக்கம் • ஆளுனர்/ஆணையர் • முதலமைச்சர் • நாடாளுமன்றம் (உறுப்பினர்கள்) |
ஜூலை 1, 1970 • இம்ரான் அலி • இர்ஃபான் அலி, ஷஹீத் ஹுசேன் • வடக்கு நிலங்களின் சட்டமன்றம் (29) |
இணையத்தளம் | |


1947 - 1948 இந்திய-பாகிஸ்தான் போருக்குப் முன்னர் பாகிஸ்தானின் பஷ்தூன் மக்கள் வடக்கு நிலங்களைக் கைப்பற்றி பாகிஸ்தானுடன் இணைத்தனர். தற்போது இது பாகிஸ்தான் அரசுக்குக் கட்டுப்பட்ட மாநிலமாக உள்ளது. வடக்கு நிலங்கள் காஷ்மீரின் பகுதி என்றாலும் இதற்கு, மேற்குப் பகுதியான ஆசாத் காஷ்மீருக்கு உள்ள அதிகாரங்களை பாகிஸ்தான் அரசு அளிக்கவில்லை. ஐக்கிய நாடுகள் அவையே காஷ்மீரின் வடக்கு பகுதியை குறிக்க வடக்கு நிலங்கள் என்ற சொல்லை முதலில் பயன்படுத்தியது.
1963 இல் பாகிஸ்தான் வடக்கு நிலங்கள் பகுதியிலிருந்து காரகோரம் பகுதியை சார்ந்த ஒரு பகுதியை சீன அரசிற்கு அளித்தது. உலகின் 2வது உயரமான கொடுமுடியான கே-2 & மற்றொரு உயரமான கொடுமுடியான நங்க பர்வதம் இங்கு உள்ளன.