வஞ்சித் தாழிசை

வஞ்சித்தாழிசை தமிழ் பாவினங்களில் ஒன்றான தாழிசையின் வகைகளுள் ஒன்று. இதில் உள்ள நான்கு அடிகளும் குறளடிகளாக (இரண்டு சீர் அடி) அமைந்திருக்கும்; ஓரெ எதுகை பெற்றிருக்கும். ஒரு பொருள் மேல் மூன்றடுக்கி வரும்.

எடுத்துக்காட்டு 1

பிணியென்று பெயராமே
துணிநின்று தவஞ்செய்வீர்!
அணிமன்றில் உமைபாகன்
மணிமன்று பணிவீரே!

எடுத்துக்காட்டு 2

பாட்டாளர் நலம்பேணாத்
தேட்டாள ராய்வாழ்வார்
மாட்டாத மரமென்ன
நாட்டாரால் நகையுண்பர்

எளியவர்க் கிரங்காமல்
ஒளியராய் உறவாழ்வார்
துளியிலா விசும்பென்ன
வெளியரால் இளிவுண்பர்

உழவர்தம் உழைப்புண்டு
விழவராய் மிகவாழ்வார்
இழவராம் இவரென்னக்
கிழவரால் இழிவுண்பர்

உசாத்துணை

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.