ரமேஷ் வைத்யா
ரமேஷ் வைத்யா பத்திரிகையாளர், திரைப்படப் பாடலாசிரியர்[1], கவிஞர், சிறுவர் எழுத்தாளர், நேரடித் தமிழ் சித்திரக்கதை எழுத்தாளர்.
தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர். ஆனந்த விகடன் நிறுவனத்தில் பல ஆண்டுகள் பணி புரிந்தார். பின்னர் ஜன்னல் வார இதழின் ஆசிரியர். தற்போது தினமலர் குழுமத்தில் இருந்து வெளிவரும் ‘பட்டம்’ என்ற மாணவர் இதழ் ஆசிரியராக பணி புரிகிறார்.
ராஜு முருகனின் படமான ‘ஜோக்கர்’ படத்தில் இவர் எழுதியிருக்கும் ‘செல்லம்மா’ என்ற பாடல் பெறும் வரவேற்பைப் பெற்றது. இயக்குநர் பத்ரியுடன் பணிபுரிந்திருக்கிறார். தில்லுமுல்லு என்ற திரைப்படத்திற்கு வசனம் எழுதியிருக்கிறார். ஆடாம ஜெயிச்சோமடா எனும் திரைப்படத்தில் கூடி நிற்கும் கூட்டமெல்லம் எனும் பிரபல பாடல் இவர் எழுதியது. பலவருடங்கள் முன்பே அஜித், பார்த்திபன் நடித்த நீ வருவாய் என எனும் ராஜகுமாரன் இயக்கிய படத்தில் “அதிகாலை சேவலை எழுப்பி” எனும் இவர் எழுதிய பாடல் மிக பிரபலமானது. தற்போது திரையுலகில் அதிக கவனம் பெற்று வருகிறார்.
சான்றுகள்
- "Ramesh Vaidhya - IMDB". பார்த்த நாள் 1 சூலை 2016.