யோக கணபதி
இந்து சமயத்தில், யோக கணபதி, விநாயகரின் முப்பத்து இரண்டு திருவுருவங்களில் 30வது திருவுருவம் ஆகும். பன்னிரு ராசிகள் ஐக்கியமாகி "ஒன்றாய் அமர்ந்திட்ட உருவம்" யோக கணபதி எனப்படுகிறது.[1]

19 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த "தத்வநீதி" என்னும் நூலில் காணப்படும் யோக கணபதியின் உருவப்படம்.
திருவுருவ அமைப்பு
யோக நிலையில் யோகபட்டம் தரித்துக்கொண்டு, இளஞ்சூரியன் போன்ற நிறத்தோடு, இந்திரநீலம் போன்ற ஆடையை உடுத்திக்கொண்டு, பாசம், அட்சமாலை, யோகதண்டம், கரும்பு இவற்றை ஏந்தி இருப்பவர்.
நம்பிக்கைகள்
இந்தத் தெய்வத்தை வழிபட்டால் பன்னிரு ராசிகளின் பலன்களும் கிட்டும் என்று இந்து சமயத்தினர் நம்புகின்றார்கள்.[1]
மேற்கோள்கள்
- "ராசியின் பலனைப் பெருக்கிடும் ராசி கணபதி வழிபாடு". திகனரன் (2000 கள்). பார்த்த நாள் 2014-04-14.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.