யெரொனீமோ
யெரொனீமோ (Geronimo, ஜெரொனீமோ, Goyaałé, சூன் 16, 1829 – பெப்ரவரி 17, 1909) முக்கியமான முதற்குடி அமெரிக்க தலைவர்களில் ஒருவர். இவர் அப்பாச்சி குடியைச் சேர்ந்தவர். அமெரிக்காவின் தெற்குப் பகுதியில், இவர்களது இடங்கள் மீது ஐக்கிய அமெரிக்கா, மெக்சிக்கோ நாடுகள் மேற்கொண்ட ஆக்கிரமிப்பை எதிர்த்து சில பத்தாண்டுகள் போரிட்டார். இவரும், இவரது சிறு படையும் கடைசி சுதந்திர முதற்குடி மக்களாக வாழ்ந்து வந்தனர். அமெரிக்க அரசு இவரை 1886 இல் பிடித்தது.
யெரொனீமோ Geronimo | |
---|---|
![]() | |
பிறப்பு | கொயாக்லா, கொயாலெ: "கொட்டாவி விடுபவர்" ஜூன் 16, 1829 கீலா ஆறு, நியூ மெக்சிக்கோ |
இறப்பு | பெப்ரவரி 17, 1909 (அகவை 79) ஃபோர்ட் சில், ஒக்லகாமா |
பணி | மருத்துவர் |
அறியப்படுவது | புகழ்பெற்ற ஒரு அப்பாச்சி வீரன் |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.