யமகம்
யமகம் என்பது செய்யுள் இயற்றுவோர் கையாளும் ஒரு புலமை விளையாட்டு.
இதனைச் சொல்விளையாட்டு எனவும் வழங்குவர்.
சித்திரக்கவி வகையில் ஒன்றாகவும் கூறுவர்.
அணி வகையில் மடக்கணி என்பர்.
அருணகிரிநாதர் இயற்றிய கந்தர் அந்தாதி நூலிலுள்ள எல்லாப் பாடல்களும் யமகச் செய்யுளால் ஆனவை.[1]
கருவிநூல்
- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினைந்தாம் நூற்றாண்டு, 2005
அடிக்குறிப்பு
-
திருவாவி னன்குடி பங்காள ரெண்முது சீருரைச
திருவாவி னன்குடி வானார் பரங்குன்று சீரலைவாய்
திருவாவி னன்குடி யேரகங் குன்றுதொ றாடல்சென்ற
திருவாவி னன்குடி கொண்டதண் கார்வரை செப்புமினே. 1
செல்வந் திகழு மலநெஞ்ச மேயவன் றெய்வமின்னூர்
செல்வந் திகழு நமதின்மை தீர்க்கும்வெங் கூற்றுவற்குச்
செல்வந் திகழுந் திருக்கையில் வேறினை காத்தசெல்வி
செல்வந் திகழு மணவாள னல்குந் திருவடியே. 100
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.