மேல்பாடி அரிஞ்சய சோழன் பள்ளிப்படை

அரிஞ்சய சோழன் பள்ளிப்படை அல்லது அவனீச்வரம் கோயில் என்பது அரிஞ்சய சோழனின் பள்ளிப்படையாகும்[1]. இதை கட்டியவர் இராசராச சோழன் ஆவார். இது தமிழகத்தின், வேலூர் மாவட்டம், திருவலத்துக்கும் சோளிங்க நல்லுருக்கும் இடையில், "மேல்பாடி"என்ற ஊரில் பொன்னை ஆற்றங்கரையில் கட்டப்பட்ட கற்றளியாகும்.

கோயில் அமைப்பு

இந்த பள்ளிப்படைக் கோயில் சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த அழகான கோயில் ஆகும். இக்கோயிலில் தன் கண்ணை இறைவனுக்கு காணிக்கையாக கொடுக்கும் கண்ணப்பரை தடுக்கும் சிவன், பிச்சாடனார் போன்ற சிற்பங்கள் உள்ளன. கோயிலின் தெற்குப்புறத்தில் "ஆற்றூர் துஞ்சிய தேவர்க்கு" பள்ளிப்படையாக உடையார் ஸ்ரீ ராஜ ராஜன் எடுபித்த கற்றளி" என்ற வரிகள் கொண்ட கல்வெட்டு உள்ளது.

ஊடகம்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.