முருகு சுந்தரம்
முருகு சுந்தரம் (26 திசம்பர் 1929 – 12 சனவரி 2007) தமிழ்க் கவிஞராவார். இவரை மறுமலர்ச்சிக் கவிஞர் என்று போற்றுகின்றனர்.[1]
வாழ்க்கை வரலாறு
1929ஆம் ஆண்டு திருச்செங்கோடு ஊரில் முருகேசன் - பாவாய் தம்பதியனருக்கு மகனாக முருகுசுந்தரம் பிறந்தார். இளநிலை கல்வியும், புலவர் பட்டமும் பெற்று மேல்நிலைப்பள்ளி ஆசிரியராகவும், தலைமை ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார். 1960ஆம் ஆண்டு தனது முதல் கவிதையை எழுதினார்.
இயற்றிய நூல்கள்
முருகு சுந்தரம் இயற்றிய இருபத்து ஆறு நூல்களும் அரசுடமையாக்கப்பட்டுள்ளன.[2]
- அரும்புகள் மொட்டுகள் மலர்கள் (நூல்)
- இந்திய இலக்கியச் சிற்பிகள் (நூல்)
- எரிநட்சத்திரம் (நூல்)
- கட்டடமும் கதையும் (நூல்)
- கடை திறப்பு (நூல்)
- காந்தியின் வாழ்க்கையிலே (நூல்)
- குயில் கூவிக்கொண்டிருக்கும் (நூல்)
- குயில்களும் இளவேனில்களும் (நூல்)
- கென்னடி வீர வரலாறு (நூல்)
- சந்தனப்பேழை (நூல்)
- சுரதா ஓர் ஒப்பாய்வு (நூல்)
- தமிழகத்தில் குறிஞ்சி வளம் (நூல்)
- தீர்த்தக் கரையினிலே (நூல்)
- பனித்துளிகள் (நூல்)
- பாட்டும் கதையும் (நூல்)
- பாரதி பிறந்தார் (நூல்)
- பாரும் போரும் (நூல்)
- பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம் (நூல்)
- பாவேந்தர் நினைவுகள் (நூல்)
- பாவேந்தர் படைப்பில் அங்கதம் (நூல்)
- புகழ்பெற்ற புதுக்கவிஞர்கள் (நூல்)
- புதுவைக் கல்லறையில் புதிய மலர்கள் (நூல்)
- மலரும் மஞ்சமும் (நூல்)
- முருகுசுந்தரம் கவிதைகள் (நூல்)
- வள்ளுவர் வழியில் காந்தியம் (நூல்)
- வெள்ளையானை (நூல்)
இவற்றையும் காண்க
ஆதாரங்களும் மேற்கோள்களும்
- http://puthu.thinnai.com/?p=9260 மறுமலர்ச்சிக் கவிஞர் மு. முருகுசுந்தரம் வாழ்வும் அவரின் படைப்புகளும் - கருப்பையன்
- http://www.tamilvu.org/library/nationalized/html/naauthor-34.htm கவிஞர் முருகு சுந்தரம் அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்
வெளி இணைப்புகள்
இந்திய இலக்கியச் சிற்பிகள்-முருகு சுந்தரம், ஆசிரியர்,சேலம் கு.கணேசன்,சாகித்திய அகாதமி
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.