முரசொலி (திமுக இதழ்)

முரசொலி இரண்டாம் உலகப்போரின்போது மு.கருணாநிதியால் துவங்கப்பட்ட திராவிட இயக்கத் தமிழ் ஏடாகும். கருணாநிதியின் பன்முக எழுத்தாண்மைக்கு படியாகவும் வடிகாலாகவும் விளங்கி அவர் சார்ந்த இயக்கத்தின் கொள்கைகள், கருத்துகளைத் தாங்கி மக்களிடையே பரவலான வரவேற்பைப் பெற்றது.

  • தொடக்கத்தில் துண்டறிக்கைகளாகவே வெளியிடப்பட்டு வந்த இந்த இதழ் ஆகத்து 10,1942 அன்று கருணாநிதியின் 18வது அகவையில் வெளியானது.
  • 1944 வரை காகிதம் கிடைக்காது துண்டறிக்கையாகவே வெளிவந்து பின்னர் நிறுத்தப்பட்டது.
  • மீண்டும் 1948ஆம் ஆண்டு புத்தாண்டில் சனவரி 14 முதல் பெரியார் ஆண்டு 69 எனக் குறிப்பிட்டு வார இதழாக திருவாரூரிலிருந்து வெளிவரத்தொடங்கியது. [1]
  • 1954ஆம் ஆண்டு சென்னையிலிருந்து வார இதழாகவே வெளிவரத் தொடங்கியது
  • செப்டெம்பர் 17, 1960 அன்று முதல் நாளேடாக வெளிவரத் தொடங்கியது.

பவளவிழா 2017 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 10 திகதி தமிழகத்தில் முரசொலி பத்திரிக்கையின் பவளவிழா நடைபெற்றன

சான்றடைவு


வெளியிணைப்புகள்

  1. குடி அரசு 1948 - சனவரி - 24, பக்.14
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.