முத்துரங்க முதலியார்
முத்துரங்க முதலியார் என்பவர் திருவள்ளூர் மாவட்டம், பூவிருந்தவல்லியிலுள்ள நாசரேத் பேட்டையைச் சேர்ந்த இந்திய விடுதலை போராட்டக்காரர். இவர் காமராசர் போன்றோரோடு வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் கலந்து கொண்டவர்.[1] அதன் காரணமாக ஆகத்து 30, 1942 அன்று வி.வி.கிரி, காமராசர், சத்தியமூர்த்தி ஐயர் , சஞ்சீவ் ரெட்டி போன்றோரோடு மத்தியப் பிரதேசத்தில் உள்ள அமராவதி சிறையில் அடைக்கப்பட்டார்.[2] 1946ஆம் ஆண்டு நடந்த சென்னை மாகாணம் சட்டசபைக் காங்கிரசு கட்சித் தலைவர் பதவிக்கு டி.பிரகாசம் பெயரும், காமராசர் ஆதரவோடு முதலியாரின் பெயரும் முன்மொழியப்பட்டது.[3]
மேற்கோள்கள்
- http://www.hindu.com/thehindu/mp/2002/12/16/stories/2002121601420200.htm
- http://www.heritagewiki.org/index.php?title=%E0%AE%AE.%E0%AE%AA%E0%AF%8A.%E0%AE%9A%E0%AE%BF_-_%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88_%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D
- http://www.perunthalaivar.org/politics/chief-minister/
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.