முகம்மது நபி அருங்காட்சியகம், ஜோர்தான்

முகம்மது நபி அருங்காட்சியகம் ஜோர்தான் நாட்டின் தலைநகரான அம்மான் நகரில் உள்ள அருங்காட்சியகம் ஆகும்.[1]

முகம்மது நபி அருங்காட்சியகம்
متحف النبي محمد
நிறுவப்பட்டது2012
அமைவிடம்ஹுசைன் பொது பூங்கா
அம்மான் ஜோர்தான்.
வகைசமய அருங்காட்சியகம்
முகம்மது நபி தொடர்பான கட்டுரைகளின் ஒரு பகுதி
முகம்மது நபி
  • இசுலாம் portal

திறப்பு

இந்த அருங்காட்சியகம் 2012 மே 15 ஆம் தேதி அம்மான் நகரிலுள்ள ஹுசைன் பொது பூங்கா பகுதியில் உள்ள மன்னர் ஹுசைன் பள்ளிவாசல் வளாகத்தில் ஆரம்பிக்கப்பட்டது. இதை திறந்து வைத்தவர் ஜோர்தான் நாட்டின் மன்னர் இரண்டாம் அப்துல்லா.[2]

அருங்காட்சியகம்

இந்த அருங்காட்சியகத்தில் முகம்மது நபியின் உடைமைகள் பாதுகாக்கப்படுகின்றன. அவரது தாடியில் இருந்து ஒரு முடி உட்பட உடைமைகள் அங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. முகம்மது நபி பைசாண்டியப் பேரரசுக்கு அனுப்பிய கடிதமும் அங்கு பாதுகாக்கப்பட்டு வருகிறது. முகம்மது நபி அவர்கள் இறைத்தூதுக்கு முன் வணிகம் செய்து காலத்தில் நிழலுக்காக இளைப்பாறிய மரத்தின் மரக்கன்று அங்கு வைக்கப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்

  1. King opens Prophet Museum in Amman, ஜோர்தான் அரசு இணையதளம்.
  2. King opens Prophet Museum in Amman Amman news, Date:5/15/2012.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.