மாபூதனார்

மாபூதனார் என்பவர் பாட்டியல் இலக்கணம் பாடிய புலவர்களில் ஒருவர். இவரது நூல் முழுமையாகக் கிடைக்கவில்லை. பன்னிரு பாட்டியல் என்னும் நூலில் இவரது பாடல்களில் சில அடைவாக்கப்பட்டுள்ளன. பாட்டியலின் மூன்று பகுதிகளில் ஒன்றான இனவியல் பகுதியில் இவரது பாடல்கள் இடம் பெற்றுள்ளன. மங்கல வெள்ளை, தாண்டகம் ஆகிய சிற்றிலக்கியங்களுக்கு அவை இலக்கணம் கூறுகின்றன.

கருவிநூல்

  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினைந்தாம் நூற்றாண்டு, பதிப்பு 2005
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.