மாக புராணம்
மாக புராணம் [1] 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அதிவீர ராம பாண்டியன் என்பவரால் பாடப்பட்ட நூல். மாசி மாதத்தில் நீராடுவதை 'மாகஸ்நானம்' என்று கொண்டாடுவது வழக்கம். இந்த நீராட்டு விழாப் பற்றிய கதைகளைக் கூறுவது மாக புராணம். இது வடமொழிப் 'பாத்ம புராணம்' [2] புராணமஎன்னும் நூலில் சொல்லப்பட்டுள்ளதாம். அந்த நூலிலிருந்து இந்தத் தமிழ்நூல் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
இதில் 12 கடவுள் வாழ்த்துப் பாடல்களும், 1412 புராணச் செய்திப் பாடல்களும் உள்ளன. [3] மாசி மாதம் ஒவ்வொரு நாளும் வைகறையில் எழுந்து காவிரி போன்ற புதுப்புனலில் நீராடும்போது இந்த நூல் ஓதப்பட்டதாகத் தெரிகிறது. கலித்துறைப் பாடல்கள், துதிப் பாடல்கள், சந்தப் பாடல்கள், உலக நீதிகள், வருணனைகள் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன.
அடிக்குறிப்பு
- மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1977, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, முதல் பாகம். சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. பக். 53.
- 18 புராணப் பட்டியலில் இரண்டாவது புராணம் பாத்ம புராணம்
- விருதுப்பட்டி இராமலிங்கக் குருக்கள் இதனை 1904-ல் அச்சிட்டு வெளியிட்டிருக்கிறார்
- பொருள் நோக்கில் சொற்பிரிப்பு செய்யப்பட்டவை
- காவிரியாற்றைத் தொழும் பாடல் (துதி 6-3)
- கூற்றுவனால் ஒன்றும் செய்யமுடியாது எனக் காறும் பாடல் (18-17)
- மர வகைகளை அடைமோழி இல்லாமல் அடுக்கிக் கூறும் பாடல் (21-9)
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.