மலையடிப்பட்டி பள்ளிகொண்டபெருமாள் கோயில்
மலையடிப்பட்டி பள்ளிகொண்டபெருமாள் கோயில் புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் வட்டத்தில் அமைந்துள்ள வைணவத் திருக்கோயில்.

அமைவிடம்
மலையடிப்பட்டி என்ற இடத்தில் இரு குகைக்கோயில்கள் உள்ளன. ஒன்று சிவனுக்கும் மற்றொன்று திருமாலுக்கும் உரியது. [1] திருமாலுக்குரிய கோயில் கண்திறந்த பெருமாள் கோயில் எனப்படுகிறது.
திருச்சிராப்பள்ளி மாவட்டம் (தேசிய நெடுஞ்சாலை 67) , துவாக்குடியிலிருந்து அசூர், செங்களூர் வழியாக கிள்ளுக்கோட்டை செல்லும் வழித்தடத்தில் 16கிமீ தூரத்திலும், புதுக்கோட்டையிலிருந்து சுமார் 33 கிமீ தூரத்தில் கிள்ளுக்கோட்டை செல்லும் வழித்தடத்தில் பள்ளிகொண்ட பெருமாள் கோயில் உள்ளது. [2]
இறைவன், இறைவி
சயன நிலையில் உள்ள பெருமாளின் பெயர் பள்ளிகொண்டபெருமாள், தாயார் ஸ்ரீதேவி மற்றும் பூதேவி.
சிறப்பு
சிவன் குகைக்கு மேற்குப் பகுதியில் விஷ்ணு குகை உள்ளது. [2] இக்கோயில் ஒரு குடவரைக்கோயிலாகும். மலையைக் குடைந்து சுவரிலேயே பள்ளிகொண்ட பெருமாள் ஆதிசேஷ சயனப்படுக்கையில் இருப்பதுபோல செதுக்கப்பட்டுள்ளது. கல்வெட்டுகள் மூலமாக கி.பி.7-8ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படுகிறது. [2] சற்றொப்ப புதுக்கோட்டை அருகே உள்ள திருமயத்தில் இருப்பதைப் போலவே இங்குள்ள பெருமாள் காணப்படுகிறார்.
மேற்கோள்கள்
- Dr.J.Raja Mohamad, Art of Pudukottai (Art and Architecture), Historical Arcives Committee,Pudukottai, 2003
- புதுக்கோட்டை மாவட்டத் திருக்கோயில்கள் பயணியர் கையேடு, இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை, சென்னை, 2003