போர்க்கெழு வஞ்சி

போர்க்கெழு வஞ்சி என்பது இலக்கண நூல்கள் காட்டும் சிற்றிலக்கிய வகைகளில் ஒன்று. வஞ்சிப்பூ மாலை அணிந்து போருக்குச் செல்லும் மன்னனின் படை எழுச்சியின் சிறப்பை ஆசிரியப்பாவால் பாடுதல் போர்க்கெழு வஞ்சியாகும். [1] [2]

போர்க்கெழு மன்னவர் வஞ்சிப் பூத்தொடை
அணிந்து புறப்படு மடுபடை யெழுச்சிச்
சிறப்பக வலினாற் செப்புதல் போர்க்கெழு
வஞ்சி யெனப்பெயர் வைக்கப் படுமே. -முத்துவீரியம் பாடல் 1071[3]

இவற்றையும் காண்க

அடிக்குறிப்பு

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.