போக்லாந்து போர்

போக்லாந்து போர் (Falklands War, எசுப்பானியம்: Guerra de las Malvinas) என்றும் போக்லாந்து சண்டை, போக்லாந்து சிக்கல் என்றும் எசுப்பானியத்தில் குர்ரெ டெல் அட்லாண்டிகோ சுர் (Guerra del Atlántico Sur, பொருள்: "தெற்கு அத்தலாந்திக்கு போர்") என்றும் அறியப்படும் இந்தப் போர் அர்கெந்தீனாவிற்கும் ஐக்கிய இராச்சியத்திற்கும் இடையே பத்து வாரங்கள் நடந்தது; தெற்கு அத்திலாந்திக்குப் பெருங்கடலில் உள்ள இரு பிரித்தானிய கடல் கடந்த ஆட்புலங்களான போக்லாந்து தீவுகளையும் தெற்கு யோர்சியா மற்றும் தெற்கு சண்ட்விச் தீவுகளையும் உரிமை கோரி இந்தப் போர் நடந்தது. ஏப்ரல் 2, 1982ஆம் ஆண்டு வெள்ளிக்கிழமை அன்று இது துவங்கியது. அர்கெந்தீனா தனது இறையாண்மையை உறுதிசெய்யும் வகையில் போக்லாந்து தீவுகளை அன்றைய தினம் ஆக்கிரமித்தது; அடுத்த நாள் தெற்கு சியார்சியாவையும் ஆக்கிரமித்தது. ஏப்ரல் 5 அன்று பிரித்தானிய அரசு தனது கடற்படை தொகுதி ஒன்றை சண்டைக்கு அனுப்பியது. இரு தரப்பினருக்கும் இடையே 74 நாட்கள் கடலிலும் வான்வெளியிலும் சண்டை நடந்தது. சூன் 14, 1982இல் அர்கெந்தீனா சரண்டைந்ததைத் தொடர்ந்து போர் முடிவுற்றது. இத்தீவுகள் பிரித்தானிய கட்டுப்பாட்டிற்கு திருப்பித் தரப்பட்டன. மொத்தத்தில், 649 அர்கெந்தீன படைத்துறையினரும், 255 பிரித்தானிய படைத்துறையினரும், மூன்று போக்லாந்து தீவினரும் இந்த சண்டைகளின் போது கொல்லப்பட்டனர்.

போக்லாந்து போர்

போக்லாந்து தீவுகளை பிரித்தானியா மீள்கைப்பற்றியதைக் காட்டும் நிலப்படம்
நாள் 2 ஏப்ரல்   14 சூன் 1982[1][2]
(2 மாதங்கள், 1 கிழமை மற்றும் 5 நாள்கள்)
இடம் போக்லாந்து தீவுகள், தெற்கு யோர்சியா மற்றும் தெற்கு சண்ட்விச் தீவுகள் மற்றும் சூழ்ந்துள்ள கடல், வான் பரப்புகள்
பிரித்தானிய வெற்றி
  • தெற்கு சியார்சியாவிலும் போக்லாந்திலும் போருக்கு முந்தைய நிலை.
  • தெற்கு துலேயில் அர்கெந்தீனாவின் ஆக்கிரமிப்பு முடிவுக்கு வந்தது.
  • 1989 வரை உறவுகள் அற்றன.
  • அக்டோபர், 1983இல் அர்கெந்தீனாவின் இராணுவ ஆட்சி மறைந்து மக்களாட்சி மலர்ந்தது.
பிரிவினர்
 ஐக்கிய இராச்சியம்  அர்கெந்தீனா
தளபதிகள், தலைவர்கள்
  • போர் அமைச்சரவை[3]
  • மார்கரெட் தாட்சர்
  • சர் டெரென்சு லெவின்
  • சர் ஜான் பீல்டவுசு
  • சாண்டி வுட்வர்டு
  • ஜெரெமி மூர்
  • சூலியன் தாம்ப்சன்
  • டோனி வில்சன்
  • தேசிய மறுசீரமைப்பு இயக்கம் (இராணுவக் குழு)
  • லியோபோல்டொ கால்டியெரி
  • ஜார்ஜ் அனயா
  • பேசிலியோ லாமி டோசோ
  • யுவான் லொம்பார்டொ
  • எர்னெசுட்டோ கிரெசுப்போ
  • மரியோ மெனென்டெசு
இழப்புகள்
  • 255 கொல்லப்பட்டனர்[nb 1]
  • 775 காயமுற்றனர்
  • 115 போர்க்கைதிகள்[nb 2]
  • 2 அழிப்புக் கப்பல்கள்
  • 2 போர்க் கப்பல்கள்
  • 1 சரக்கு இறக்கு கப்பல்
  • 1 இறங்கு கருவி கப்பல்
  • 1 கொள்கலக் கப்பல்
  • 24 உலங்கு வானூர்திகள்
  • 10 போர் வானூர்திகள்
  • 1 குண்டுபொழிவு வானூர்தி (பிரேசிலின் கட்டுப்பாட்டில்)
  • 649 கொல்லப்பட்டனர்[nb 3]
  • 1,657 காயமடைந்தனர்[5]
  • 11,313 போர்க் கைதிகள்
  • 1 குரூசைர்
  • 1 நீர்மூழ்கி கப்பல்
  • 4 சரக்கு கப்பல்கள்
  • 2 சுற்றுக்காவல் படகுகள்
  • 1 உளவு கப்பல்
  • 25 உலங்கு வானூர்திகள்
  • 35 போர் வானூர்திகள்
  • 2 குண்டு வீசிகள்
  • 4 சரக்கு வானூர்திகள்
  • 25 எதிர்த்தாக்கு வானூர்திகள்
  • 9 ஆயதமேந்திய பயிற்சி வானூர்திகள்
பிரித்தானிய குண்டுவீச்சில் 3 குடிமக்கள் கொல்லப்பட்டனர்

இந்த நிலப்பகுதிகளின் இறைமை குறித்து இந்த இருநாடுகளுக்கும் இடையே நீண்ட நாட்களாக இருந்து வந்த பிணக்கு இந்தப் போருக்குக் காரணமாக அமைந்தது. அர்கெந்தீனா இத்தீவுகளை தன்னுடைய நிலப்பகுதிகளாக (இன்றளவும்) கோரி வருகின்றது.[6] எனவே அர்கெந்தீனா தனது படைத்துறை முனைவை தனது ஆட்பகுதியை மீள்விக்கும் முனைவாகவே வகைப்படுத்தியது. பிரித்தானிய அரசு தனது கட்டுப்பாட்டில் 1841 முதல் உள்ள பகுதிகளில் ஆக்கிரமிப்பாக இதனைக் கருதியது. 19ஆவது நூற்றிண்டின் துவக்கத்திலிருந்து இங்கு குடியேறியுள்ள போக்லாந்து மக்களில் பெரும்பான்மையோர் பிரித்தானிய குடியேறிகளாக இருந்தமையால் அவர்கள் பிரித்தானிய இறைமையை ஆதரித்தனர். (1986இல் நடந்த பொதுவாக்கெடுப்பில் இதனை உறுதி செய்தனர்.) எனவே இரு நாடுகளும் அலுவல்முறையாக போர்ப் பிரகடனம் செய்யவில்லை; இருப்பினும் இரு நாடுகளாலும் தீவுப்பகுதிகள் போர் மண்டலங்களாக அறிவிக்கப்பட்டன, அலுவல்முறையாக தங்களுக்கிடையே போர் நிலை நிலவுவதாக ஏற்றன. சண்டை பெரும்பாலும் தாவாவிற்குள்ளான பகுதிகளில் மட்டுமே நடந்தது.

இந்த சண்டையால் இருநாடுகளுக்கும் இடையேயான உறவு மிகவும் பாதிக்கப்பட்டது. பண்பாட்டு நிலைகளிலும் இதன் தாக்கமேற்பட்டு நூல்கள், கட்டுரைகள், திரைப்படங்கள் மற்றும் பாடல்களில் எதிரொலித்தது. அர்கெந்தீனாவில் நாட்டுப்பற்று உணர்வு கிளர்ந்தெழுந்தது; இது ஆட்சியிலிருந்த படைத்துறை குழுவினருக்கு எதிராக மாறி ஆட்சி கவிழ்ந்தது. ஐக்கிய இராச்சியத்தில் ஆண்டுவந்த கன்சர்வேட்டிவ் கட்சி மீண்டும் தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சி அமைத்தது. இன்றளவும் அர்கெந்தீனாவில் இதன் தாக்கம் நீடிக்கின்றது.[7]

இருநாடுகளுக்கும் அற்றுப் போயிருந்த உறவு 1989இல் எசுப்பானியாவின் மத்ரித்தில் நடந்த சந்திப்பில் இருநாடுகளின் இணையறிக்கை மூலமாக புதுப்பிக்கப்பட்டது.[8] இதில் போக்லாந்து தீவுகளின் இறைமை குறித்து எந்தவொரு மாற்றத்தையும் இருநாடுகளும் வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை. 1994இல், அர்கெந்தீனாவின் அரசியலமைப்புச் சட்டத்தில் இப்பகுதிகளுக்கான உரிமை சேர்க்கப்பட்டுள்ளது.[9]

குறிப்புகள்

  1. 255 military personnel.[4]
    • 2 April: 57 Royal Marines (RM), 11 Royal Navy (RN) and 23 Falkland Islands Defence Force (FIDF) members
    • 3 April: 22 RM
    • 21 May: 1 Royal Air Force (RAF) member
    • 10 June: 1 Special Air Services (SAS) member.
  2. 633 military personnel and 16 civilian sailors.[5]

மேற்சான்றுகள்

  1. "Falklands 25: Background Briefing". Ministry of Defence (United Kingdom). மூல முகவரியிலிருந்து 3 May 2010 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 1 November 2009.
  2. "Nómina de veteranos de Guerra de Malvinas que cumplen con los requisitos establecidos por la Ley 23.848" (Spanish). Ministry of Defense (Argentina). மூல முகவரியிலிருந்து 23 October 2011 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 1 November 2009.
  3. Freedman 2005b, pp. 21–22: "day-to-day oversight was to be provided by ... which came to be known as the War Cabinet. This became the critical instrument of crisis management"
  4. "Falkland Islands profile". BBC (5 November 2013). பார்த்த நாள் 19 June 2014.
  5. Historia Marítima Argentina, Volume 10, p. 137. (Departamento de Estudios Históricos Navales, Cuántica Editora, Argentina: 1993.
  6. "Argentine to reaffirm Sovereignty Rights over The Falkland Islands". National Turk. பார்த்த நாள் 7 January 2012.
  7. "Cómo evitar que Londres convierta a las Malvinas en un Estado independiente". Clarin.com. பார்த்த நாள் 7 February 2010.
  8. "Joint statement of 19 October 1989: Re-establishing Consular Relations Between Britain and Argentina, and Agreeing a Framework on Sovereignty Which Would Allow Further Talks". மூல முகவரியிலிருந்து 17 May 2012 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 4 January 2013.
  9. "Constitución Nacional" (Spanish). மூல முகவரியிலிருந்து 2013 அன்று பரணிடப்பட்டது. "La Nación Argentina ratifica su legítima e imprescriptible soberanía sobre las Islas Malvinas, Georgias del Sur y Sandwich del Sur y los espacios marítimos e insulares correspondientes, por ser parte integrante del territorio nacional."
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.