பெருந்தேவனார்
காலப்பாதையில் பெருந்தேவனார் என்னும் பெயருடன் அவ்வப்போது சில புலவர்கள் வாழ்ந்துள்ளனர்.
நிரல்
புலவர் | காலம் | குறிப்பு |
---|---|---|
பெருந்தேவனார் (சங்க காலம்) | கி.பி. 100-க்கு முன் | அகநானூறு 9, [1] [2] * நற்றிணை 83 [3] |
பெருந்தேவனார் (கடுகு பெருந்தேவனார்) | கி.பி. 100-க்கு முன் | குறுந்தொகை 255 [4] |
பெருந்தேவனார் (பாரதம் பாடியவர்) [5] [6] | கி.பி. 700-க்கு முன் [7] | * அகம், புறம், ஐங்குறுநூறு - சிவன் * குருந்தொகை – முருகன் * நற்றிணை – திருமால் * ஆகிய கடவுள் வாழ்த்துப் பாடல்களைப் பாடியவர். |
பெருந்தேவனார் (பாரதவெண்பா பாடியவர்) | 825-850 [8] | பாரதவெண்பா ஒரு பகுதி அச்சிடப்பட்டுள்ளது |
பெருந்தேவனார் (வீரசோழிய உரைகாரர்) | 1100-1125 | வீரசோழியம் நூலுக்கு உரை எழுதியவர் |
பெருந்தேவனார் (கவிராச பெருந்தேவனார்) | – | ‘பூவிற்குத் தாமரை’ எனத் தொடங்கும் திருவள்ளுவ மாலைப் பாடல் இவர் பாடியதாக உள்ளது. [9] |
அடிக்குறிப்பு
- கல்லாடனார் பாடியதாக உள்ள இந்தப் பாடல் பெருந்தேவனார் பாடியதாகவும் உள்ளது.
- வில்லோர் தூணியில் அம்பு வைத்திருப்பர் என்கிறார்
- கூகைக்கு எலி - பற்றிக் குறிப்பிடுகிறார்.
- யானை யா மரத்தைத் தின்னும் என்கிறார்
- “மாபாரதம் தமிழ்ப்படுத்தும்” எனச் சின்னமனூர்ச் செப்பேடு குறிப்பிடும் புலவர்
- இவர் தமிழ்ப்படுத்திய மாபாரதம் இன்று இல்லை
- எட்டுத்தொகை தொகுக்கப்பட்ட காலம்
- மூன்றாம் நந்திவர்மனின் தெள்ளாற்றுப் போரைக் குறிப்பிடுகிறார்
- திருவள்ளுவ மாலை ஒரு போலிநூல்.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.