பாரதம் பாடிய பெருந்தேவனார்

பாரதம் பாடிய பெருந்தேவனார் சங்ககாலப் புலவர் அல்லர். சங்கநூல்கள் தொகுக்கப்பட்ட காலத்தவர். எட்டுத்தொகை நூல்களைத் தொகுத்தவர். இவரது கடவுள் வாழ்த்துப் பாடல்களை நூலுக்குத் தொடக்கப் பாடலாக இணைத்துள்ளார்.[1]

இவரது பாடல்கள் அகநானூறு, ஐங்குறுநூறு, குறுந்தொகை, நற்றிணை, புறநானூறு[2] ஆகிய ஐந்து நூல்களுக்குக் கடவுள் வாழ்த்துப் பாடல்களாக அமைந்துள்ளன.

காலம்
  • இவரது காலம் கி.பி. 700-க்கு முன்பாகும்.[3]
  • ஒன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்தார் என்பர்.[4]
நூல்கடவுள்நூலின் எண்ணிக்கைத் தொகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளதா?
அகநானூறுசிவன்இல்லை
ஐங்குறுநூறுசிவன்இல்லை
குறுந்தொகைமுருகன்இல்லை
நற்றிணைதிருமால்இல்லை
புறநானூறுசிவன்ஆம்

இவரால் பாடப்பட்ட பாரத வெண்பாக்கள் 818 தொகுக்கப்பட்டு நூலாக வெளிவந்துள்ளது.

அடிக்குறிப்பு

  1. பாரதம் பாடிய பெருந்தேவனார் - தமிழ் இணையக் கல்விக் கழகம்
  2. புறநானூறு 1 கடவுள் வாழ்த்துப் பாடல்
  3. மு. அருணாசலம் தமிழ் இலக்கிய வரலாறு, ஒன்பதாம் நூற்றாண்டு, பாகம் 1, பக்கம் 3
  4. மு. அருணாசலம் தமிழ் இலக்கிய வரலாறு, பதினோராம் நூற்றாண்டு, பக்கம் 19
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.