சிட்டி பெ. கோ. சுந்தரராஜன்

சிட்டி பெ. கோ. சுந்தரராஜன் (ஏப்ரல் 20, 1910 - ஜூன் 24, 2006) மணிக்கொடிக் கால எழுத்தாளர், திரைப்பட விமர்சகர், பட்டதாரி ஆசிரியர்.

சிட்டி பெ. கோ. சுந்தரராஜன்
பிறப்புஏப்ரல் 20, 1910(1910-04-20)
இறப்புசூன் 24, 2006(2006-06-24) (அகவை 96)
அறியப்படுவதுஎழுத்தாளர்
பெற்றோர்பி. எஸ். கோவிந்தசாமி
வெங்கலெட்சுமி

அகில இந்திய வானொலியின் இதழ்ப் பொறுப்பாசிரியராகவும் முதுநிலை நிருபராகவும் 1968 வரை பணி புரிந்தவர். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் சிறப்புப் பேராசிரியராக சோ. சிவபாதசுந்தரத்துடன் இணைந்து பணியாற்றியவர். 1875இல் ஆதியூர் அவதானி - முதல் தமிழ்க் கவிதை நூலை வெளியிட்டவர். (சிவபாதசுந்தரத்துடன் கண்டுபிடித்து வரலாற்று முறையிலான முன்னுரை எழுதி 1994இல் இது வெளியானது).

விருதுகள்

  • ஐந்தாவது உலகத்தமிழாராய்ச்சி மாநாட்டில் இந்தியப் பிரதமரால் கௌரவிக்கப்பட்டவர்.
  • 1989இல் சென்னைப் புத்தகக் கண்காட்சியில் ரோல் ஆஃப் ஹானர் விருது வழங்கப் பெற்றவர்.
  • தமிழ் சிறுகதை: வரலாறும் வளர்ச்சியும் - சோ சிவபாதசுந்தரத்துடன் எழுதிய நூலுக்கு இலக்கியச் சிந்தனை விருது பெற்றவர்.

எழுதிய நூல்கள்

  • அந்தி மந்தாரை (சிறுகதைத் தொகுப்பு)
  • சில விஷயங்கள் (நகைச்சுவைக் கட்டுரைகள்)
  • கண்ணன் என் கவி (கு.ப.ரா.வுடன் சேர்ந்து பாரதியார் படைப்புகள் பற்றி எழுதிய திறனாய்வு)
  • தமிழ் நாவல் நூற்றாண்டு வளர்ச்சி (சோ. சிவபாதசுந்தரத்துடன் சேர்ந்து எழுதிய இலக்கிய வரலாறு)
  • நடந்தாய் வாழி காவேரி (தி. ஜானகிராமனுடன் இணைந்து எழுதிய பயணநூல்)

தமிழ் மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலப் படைப்புகள்

  • தி லைஃப் ஆஃப் சத்தியமூர்த்தி
  • தி பரமாச்சார்யா

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.