பூண்டி அரங்கநாத முதலியார்
அரங்கநாத முதலியார் என்னும் தமிழறிஞர் 1837 ஆம் ஆண்டில் பூண்டியில் பிறந்தார்.[1] எனவே பூண்டி அரங்கநாத முதலியார் என அழைக்கப்பட்டார்.

கல்வி
கணிதத்தில் கலை முதுவர் பட்டம் (Master of Arts in Mathematics) பெற்றார்.[1]
பணி
பெல்லாரி மாவட்டப் பள்ளி (Bellary Provincial School), கும்பகோணம் கல்லூரி, சென்னை மாநிலக் கல்லூரி ஆகியவற்றில் கணிதப் பேராசிரியராகவும் சென்னை மாகாண நிர்வாகத்தால் ஏற்பளிக்கப்பட்ட மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றினார்.[2]
பட்டம்
ஆங்கில அரசாங்கத்திடம் திவான் பகதூர் பட்டம் பெற்றவர்.[1]
இயற்றிய நூல்
கச்சிக் கலம்பகம் என்னும் நூலை இயற்றினார்.[1]
சான்றடைவு
- கந்தையா பிள்ள ந. சி., தமிழ்ப் புலவர் அகராதி: புலவர் அகர வரிசை, ஆசிரியர் நூற்பதிப்புக் கழகம் சென்னை, மு.பதிப்பு 1952, பக்.19
- வைத்தியநாதன் கே, தினமணி செம்மொழிக்கோவை 2010, சென்னை, பக்.275
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.