கச்சிக் கலம்பகம்

கச்சிக் கலம்பகம் என்னும் நூல் 14ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இரட்டைப்புலவர் பாடியது எனப் புலவர் புராணம் பாடிய புலவர் குறிப்பிடுகிறார்.

மூவர் அம்மானை என்னும் நூலில் தில்லைக் கலம்பகப் பாடல் ஒன்று இருப்பது போலக் கச்சிக்கு உரிய அம்மானைப் பாடல் ஒன்றும் உள்ளது.[1]

குறிப்பு – பூண்டி அரங்கநாத முதலியார் (1837 - 1893) என்பவர் “கச்சிக் கலம்பகம்” என்னும் பெயரில் ஒரு நூல் செய்துள்ளார்.

கருவிநூல்

அடிக்குறிப்பு

  1. எண்ணரிய காஞ்சியில் வாழ் ஏகாம்பர நாதர்
    அண்ணல் திரு மேனியெங்கும் ஆகாசம் அம்மானை
    அண்ணல் திரு மேனியெங்கும் ஆகாசம் ஆமாயின்
    வண்ணமுலை மார்பில் வடுப்படுமோ அம்மானை

    மாவடிவில் வாழ்பவர்க்கு வடு அரிதோ அம்மானை
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.