பிப்பலாத மகரிசி
பிப்பலாத மகரிசி புராணங்களின் கூற்றின்படி வேத ஆசிரியராவார்.இவர் அதர்வண வேதத்தில் கைதேர்ந்தவர். இவரது பெற்றோர் ததீசி முனிவர் மற்றும் சுவர்ச்சா தேவியாவர். இவரது பெற்றோர் இவரை பிப்பல மரத்தின் அடியில் விட்டு விட்டு இயற்கை எய்தினர். இதன் காரணமாகவே இவருக்கு இப்பெயர் வந்தது. புத்தரும் பிப்பல மரத்தடியிலேயே ஞானம் பெற்றது குறிப்பிடத்தக்கது.
பிரஸ்ன உபநிடதத்தில் கூறப்படும் ரிஷிகளில் பிப்பலாத ரிஷியும் ஒருவராவார்.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.