பாண்டில் அரசன்

பாண்டில் என்பவன் அரிசில் என்னும் ஊரின் அரசன். இவனை ‘இசைவெங்கிள்ளி’ என்னும் சோழன் வென்றான். பாண்டில் என்னும் அரசனுக்கும், இசைவெங்கிள்ளி என்னும் சோழனுக்கும் இடையே, அரிசில் ஆறு பாயும் அம்பர் என்னும் ஊரில் போர் நிகழ்ந்தது. போரில் கிள்ளி வெற்றி பெற்றான். [1]

அடிக்குறிப்பு

  1. பருந்து படப் பாண்டிலொடு பொருத பல் பிணர்த் தடக்கை ஏந்து கோட்டு யானை இசை வெங் கிள்ளி வம்பு அணி உயர்கொடி அம்பர் சூழ்ந்த அரிசில் இம் தண் அறல் அன்ன இவள் விரி ஒலி கூந்தல் - நற்றிணை 141
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.