பாட்டன்பேர்க்கின் இளவரசி அலிஸ்

பாட்டன்பேர்க்கின் இளவரசி அலிஸ் (விக்டோரியா அலிஸ் எலிசபெத் ஜூலியா மேரி; 25 பெப்ரவரி 1885 – 5 டிசம்பர் 1969)எடின்பரோ கோமகன், இளவரசர் பிலிப்ன் தாய் ஆவார். மற்றும் ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாம் எலிசபெத் மாமியார் அலிஸ் ஆவார்.

இளவரசி அலிஸ்
கிரீஸ் மற்றும் டென்மார்க் இளவரசி ஆண்ட்ரூ

வாழ்க்கைத் துணை கிரீஸ் மற்றும் டென்மார்க் இளவரசர் ஆண்ட்ரூ (தி. 19031944) «start: (1903-10-06)end+1: (1944-12-04)»"Marriage: கிரீஸ் மற்றும் டென்மார்க் இளவரசர் ஆண்ட்ரூ to பாட்டன்பேர்க்கின் இளவரசி அலிஸ்" Location: (linkback://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D)
வாரிசு

கிரீஸ் இளவரசி மார்கரிட்டா
கிரீஸ் மற்றும் டென்மார்க் இளவரசி தியோடோரா
Cecilie, Hereditary Grand Duchess of Hesse
கிரீஸ் மற்றும் டென்மார்க் இளவரசி சோபியா
எடின்பரோ கோமகன், இளவரசர் பிலிப்
முழுப்பெயர்
விக்டோரியா அலிஸ் எலிசபெத் ஜூலியா மேரி
குடும்பம் Battenberg
தந்தை பாட்டன்பேர்க்கின் இளவரசர் லூயிஸ்
தாய் Princess Victoria of Hesse and by Rhine
பிறப்பு பெப்ரவரி 25, 1885(1885-02-25)
வின்ட்சர் கோட்டை, Berkshire, England
இறப்பு 5 திசம்பர் 1969(1969-12-05) (அகவை 84)
பக்கிங்காம் அரண்மனை, இலண்டன், England
அடக்கம் St George's Chapel, Windsor Castle (1969–1988);
மகதலேனா மரியாள் தேவாலயம், கெத்சமனி, எருசலேம் (since 1988)
கையொப்பம்

இவர் விக்டோரியாவின் கொள்ளு பேத்தி [1] ஆவார். சிறுவயதில் இவர் இங்கிலாந்து, செர்மன் பேரரசு மற்றும் மத்திய தரைக்கடல் நாடுகள் ஆகியவற்றில் வளர்ந்தார். இவர் பிறவி செவிடால் பாதிக்கப்பட்டவர். கிரீஸ் மற்றும் டென்மார்க் இளவரசர் ஆண்ட்ரூவை 1903 ஆம் ஆண்டில் திருமணம் செய்துகொண்ட பிறகு அவர் கிரீஸ் மற்றும் டென்மார்க் இளவரசி ஆண்ட்ரூ என்ற பாணியை தம் பெயராக பயன்படுத்தினார்.1917 ல் கிரேக்க அரச குடும்பத்தின் பெரும்பகுதி அழியும் வரை அவர் கிரேக்கத்தில் வாழ்ந்து வந்தார். சில வருடங்கள் கழித்து கிரீஸ் திரும்பியபோது ​​அவருடைய கணவர் கிரேக்க-துருக்கிய போரில்(1919–1922) நாட்டின் தோல்விக்கு ஒரு காரணமாக குற்றம் சாட்டப்பட்டார்.1935 ஆம் ஆண்டில் கிரேக்க முடியாட்சியின் மறுமலர்ச்சியால் இக் குடும்பத்தினர் மீண்டும் வெளியேற்றபட்டனர்.1930ல் இவர் மனப்பித்தால் பாதிக்கப்பட்டார். பின் சுவிட்சர்லாந்தில் ஒரு மருத்துவரிடம் ஒப்படைக்கப்பட்டார்.அதன் பிறகு அவர் கணவனிடமிருந்து தனியாக வாழ்ந்தார். அவர் மன நோய் மீட்புக்குப் பிறகு மீதமிருக்கும் பெரும்பாலான ஆண்டுகள் கிரேக்கத்தில் நன்கொடை மற்றும் சேவைகளுக்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்தார். அவர் இரண்டாம் உலகப் போரின்போது ஏதென்ஸில் தங்கினார். யூத அகதிகளுக்கு தங்குமிடமாக இருந்தார். இதனால் இஸ்ரேல் ஹோலோகாஸ்ட் நினைவுக் கழகத்தின் யாத் வசிம் என்பவரால் "தேசங்களுக்கிடையில் நீதியுள்ளவர்" என அவர் அங்கீகரிக்கப்படுகிறார். போருக்குப் பின் கிரேக்கத்தில் தங்கினார். மார்த்தா மற்றும் மேரி என்ற கிறிஸ்தவ சகோதரி என்று அறியப்பட்ட கன்னியாஸ்திரிகளின் ஒரு செவிழியர் ஆணை ஒன்றை நிறுவினார். கிரீஸ் இரண்டாம் அரசின் வீழ்ச்சி மற்றும் கிரீஸ் இராணுவ ஆட்சி எழுச்சிக்கு பின்னர் 1967ல் அவர் லண்டனில் பக்கிங்ஹாம் அரண்மனையில் வாழ தனது மகன் மற்றும் மருமகளால் அழைக்கப்பட்டார். அங்கு அவர் இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் இறந்தார். 1988 இல் ஜெருசலேத்தில் அவரது உடல் ஒலிவ மலையில் அடக்கம் செய்யப்பட்டது.

இரண்டாம் உலகப்போரின் போது

இரண்டாம் உலகப் போரின் போது ​​இளவரசி துக்கமாக இருந்தார் மருமகன் செர்மன் பக்கத்திலும் மகன் பிரிட்டிஷ் ராயல் கடற்படையிலும் இருந்ததே இதற்கு காரணம். அவரது உறவினர் இளவரசர் விக்டர் ஜு எர்பாக் ஷன்பெர்க் கிரேக்கத்தில் ஜேர்மனிய தூதராக ஏப்ரல் 1941 ல் அச்சு நாடுகளன் படைகளால் ஏதென்ஸ் ஆக்கிரமிக்கும் வரை இருந்தார். அவர் மற்றும் அவரது அண்ணி கிரீஸ் இளவரசி நிக்கோலஸ் (இளவரசி மெரினா டச்சஸ் ஆஃப் கென்ட்) போர் நடைபெற்ற காலத்தில் ஏதென்ஸில் வசித்து வந்தாரகள். அதே நேரத்தில் கிரேக்க அரச குடும்பத்தின் பெரும்பகுதி தென்னாப்பிரிக்காவிற்கு நாடுகடத்தப்பட்டது. ஏதென்ஸின் மையத்தில் அவரது சிறிய அடுக்கு மாடி வீடை அவரது மைத்துனரான ஜார்ஜ்ஸின் மூன்று அடுக்கு மாடி வீட்டிற்குள் விட்டு சென்றார். அவர் செஞ்சிலுவைக்காக பணிபுரிந்தார். பட்டினியிருந்த மக்களுக்காக சூப் சமையலறைகளை ஒழுங்கமைத்து மருத்துவ உதவியை பெற ஸ்வீடனுக்கு பறந்தார். அவரது சகோதரியான லூயிஸை சந்திப்பதாக சாக்குப்போக்கு சொல்லி மருத்துவப் பொருட்களை திரும்ப கொண்டு வந்தார்.அனாதை மற்றும் கைவிடப்பட்ட பிள்ளைகளுக்காக இரண்டு முகாம்களும் மற்றும் ஏழை அண்டை நாடுகளுக்காக பல செவிழியற் மையங்களையும் சுற்றுப்பகுதியில் அவர் ஏற்பாடு செய்தார். ஹெஸ்ஸின் இளவரசர் கிறிஸ்டோஃப் செர்மன் நாசி கட்சி மற்றும் ஜெர்மன் படையின் இன் உறுப்பினராகவும் இருந்தார். இவர் பெத்தனால், பாடன், மார்க்வேவ், பிரான்சில் காயமடைந்த பின்னர் 1940 ல் ஜேர்மன் இராணுவத்தில் இருந்து வெளியேறினார். "நான் உங்களுக்காக ஏதாவது செய்ய முடியுமா?" என ஒரு ஜேர்மன் அதிகாரி அவரை வினவ "நீங்கள் உங்கள் துருப்புக்களை என் நாட்டை விட்டு வெளியேற்ற செய்ய முடியும்" என்று பதிலளித்தார்.

1943 ல் இத்தாலிய சர்வாதிகாரி பெனிடோ முசோலினியின் வீழ்ச்சிக்குப் பின்னர் ஜேர்மன் இராணுவம் ஏதென்ஸை ஆக்கிரமித்தது. அங்கு சிறுபான்மை கிரேக்க யூதர்கள் அடைக்கலம் புகுந்தனர். பெரும்பான்மை 75,000 மொத்த மக்கள் தொகையில் சுமார் 60,000 பேரை நாஜி சித்திரவதை முகாம்களுக்கு அனுப்பப்பட்டனர், இதில் 2,000 பேர் இறந்தனர். இந்த காலகட்டத்தில் இளவரசி ஆண்ட்ரூ யூத விதவை ரேச்சல் கோஹன் மற்றும் அவரது ஐந்து குழந்தைகளை மறைத்து கெஸ்டப்போவைத் தவிர்ப்பதற்காகவும் இறப்பு முகாம்களுக்கு நாடு கடத்தப்படவும் முயன்றார். முன்னதாக, 1913 இல் ரேச்சல் கணவர் ஹமைமா கோஹன் கிரீஸ் அரசர் முதலாமா ஜார்ஜ்க்கு உதவினார். அதற்கு பதிலாக அரசர் ஜார்ஜ் அவருக்கு சில அதிகாயங்களை வழங்கினார். ஆண்டுகள் கழித்து நாஜியின் அச்சுறுத்தலின் போது ​​கோஹனின் மகன் இதை நினைவில் வைத்துக் கொண்டு இளவரசி நிக்கோலஸுடன் இளவரசி ஆண்ட்ரூவிடம் வேண்டுகோள் விடுத்தார். கிரேக்கத்தில் விட்டுச் சென்ற அரச குடும்பத்தில் எஞ்சிய இரண்டு உறுப்பினர்களில் ஒருவராக இருந்தார். அவர் சத்தியத்தை மதித்து கோஹன் குடும்பத்தை காப்பாற்றினார்.

தலைப்புகள் மற்றும் பட்டங்கள்

தலைப்புகள்

  • 25 பெப்ரவரி 1885 - அக்டோபர் 6, 1903: பாத்தன்பேர்க்கின் இளவரசி ஆலிஸ் [2]
  • 6 அக்டோபர் 1903 – 5 டிசம்பர் 1969: கிரீஸ் மற்றும் டென்மார்க் இளவரசி ஆண்ட்ரூ [2]
  • 1949 இலிருந்து அவரது இறப்பு வரை சில சமயங்களில் அன்னை ஆலிஸ்-எலிசபெத்[2]

பட்டங்கள்

  • கிரீஸ் இராச்சியத்தின் டேன் பெருஞ்சிலுவை புனித ஓல்கா மற்றும் சோபியா (1903) பட்டம்[3]
  • ஐக்கிய இராச்சிய அரசின் செஞ்சிலுவை பட்டம் (1913)
  • இறப்புக்குப் பின்:

இஸ்ரேலின் "தேசங்களுக்கிடையில் நீதியுள்ளவர்" பட்டம் (1993)[4]

மேற்கோள்கள்

  1. Vickers, p. 2
  2. Ruvigny, p. 71
  3. Montgomery-Massingberd, Hugh (ed.) (1977), Burke's Royal Families of the World, 1st edition, London: Burke's Peerage, p. 214, ISBN 0-85011-023-8CS1 maint: extra text: authors list (link)
  4. பாட்டன்பேர்க்கின் இளவரசி அலிஸ் - யாட் வசெம் (ஆங்கில மொழியில்)
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.