பாங்புய் தேசியப் பூங்கா

பாங்புய் தேசியப் பூங்கா இந்திய மாநிலமான மிசோரத்தின் லாங்தலாய் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது மாநிலத் தலைநகரான அய்சால் நகரத்தில் இருந்து 300 கி.மீ தொலைவில் உள்ளது. இந்த பூங்கா மியான்மர் எல்லைக்கு அருகில் உள்ளது. இங்கு பாங்புய் என்ற உயரமான மலைச் சிகரம் உள்ளது.[1] மலையும், அருகில் உள்ள காடும் பூங்காவின் நிர்வாக எல்லைக்குள் உள்ளன.[2]

பாங்புர் தேசியப் பூங்கா
Phawngpui National Park
அமைவிடம்மிசோரம், இந்தியா
கிட்டிய நகரம்அய்சால்
ஆள்கூறுகள்22°40′N 93°03′E
பரப்பளவு50 சதுர கிலோமீட்டர்கள் (19 sq mi)
நிறுவப்பட்டது1992
வருகையாளர்கள்469 (in 2012-2013)
நிருவாக அமைப்புசுற்றுச்சூழல் மற்றும் வனங்கள் துறை, மிசோரம் அரசு

காட்டுயிர்

இங்கு தேன்சிட்டு, மலையாடு, பெரிய தேவாங்கு, புலி, சிறுத்தை, சிறுத்தைப் பூனை, கருங்கரடி உள்ளிட்ட விலங்குகளும் பறவையினங்களும் வாழ்கின்றன.[3] கரும்பருந்து, அண்டங்காக்கை உள்ளிட்ட அரிய வகை பறவைகளும் காணப்படுகின்றன.[4] இங்குபடைச்சிறுத்தையையும் காண முடியும்.[5] இங்கு ஆர்க்கிட், மூங்கில் உள்ளிட்டவற்றையும் காணலாம்.[6]

சுற்றுலா

நவம்பர் முதல் வாரத்தில் இருந்து ஏப்ரல் இறுதி வரை தேசியப் பூங்காவுக்கு பார்வையாளர்கள் வந்து செல்ல அனுமதி உண்டு. இறுதியாக எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, 52 வெளிநாட்டுப் பயணிகள் உட்பட 569 பார்வையாளர்கள் வந்து சென்றனர்.[7]

மேலும் பார்க்க

சான்றுகள்

இணைப்புகள்

ஆங்கிலத்தில் சுற்றுலா குறிப்பேடுகள்
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.