நூர் இனாயத் கான்
நூர் இனாயத் கான் (Noor Inayat Khan அல்லது Nora Baker, சனவரி 1, 1914 - செப்டம்பர் 13, 1944), இந்திய முஸ்லிம் இனத்தவர். இரண்டாம் உலகப் போரின் போது பிரித்தானியாவின் சிறப்பு உளவுப் பிரிவில் (எஸ்.ஒ.இ.) ரகசிய உளவாளியாக இருந்தவர். பிரான்சை நாட்சி செருமனி கைப்பற்றியிருந்த போது பிரெஞ்சு எதிர்ப்பு இராணுவத்தினரின் உதவிக்காக அங்கு அனுப்பப்பட்டார். முதலாவது பெண் வானொலி இயக்குனராக அங்கு மாடலீன் என்ற பெயரில் பணியாற்றி லண்டனுக்கு உளவுப் பணியாற்றி வந்தார். இவர் இட்லரின் இரகசியப் படையினரால் 1943 அக்டோபர் 13 ஆம் நாள் பாரிசில் கைது செய்யப்பட்டு செருமனியில் உள்ள டேச்சு நாட்சி வதை முகாமிற்கு அனுப்பப்பட்டார். அங்கு அவர் வேறு மூன்று பெண் கைதிகளுடன் சேர்த்து 1944 செப்டம்பர் 13 ஆம் நாள் சுட்டுக் கொல்லப்பட்டார்.
நூர் இனாயத் கான் Noor Inayat Khan Nora Baker | |
---|---|
சனவரி 1, 1914
- 13 செப்டம்பர் 1944 30)(அகவை | |
![]() 1940-1942 இல் நூர் கான் | |
பட்டப்பெயர் | ஏஜண்ட் போனோ, மடலீன் |
பிறந்த இடம் | மாஸ்கோ, உருசியா |
இறந்த இடம் | டேச்சு வதை முகாம், செருமனி |
சார்பு | ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ் |
பிரிவு | Women's Auxiliary Air Force, Special Operations Executive First Aid Nursing Yeomanry |
சேவை ஆண்டு(கள்) | 1940-1944 (WAAF)/1943-1944 (SOE) |
தரம் | Assistant Section Officer (WAAF)/ (FANY) |
அலகு | மருத்துவர் |
மேற்கோள்கள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.