நான்காம் பத்து (பதிற்றுப்பத்து)

சங்க நூலான பதிற்றுப்பத்தின் நான்காம் பத்து தொகுப்பில் பத்து பாடல்கள் உள்ளன. அவை காப்பியாற்றுக் காப்பியனார் என்னும் புலவர் களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் என்னும் சேர அரசனைப் பாடியவை.[1] அவை அனைத்தும் அந்தாதி முறையில் தொடுக்கப்பட்டுள்ளன. முந்தைய பாடலின் இறுதியை அடுத்த பாடலின் முதலாகத் தொடுப்பது அந்தாதி. அந்தாதி நூல்களில் நூல் முடியும் தொடரோடு நால் தொடங்கும் தொடருங்கூடத் தொடுக்கப்பட்டிருக்கும். இந்தப் பத்தில் அந்தத் தொடுப்பு காணப்படவிலை. எனவே புலவர் பாடிய பல பாடல்களைக் கொண்ட நூலிலிருந்து 10 பாடல்கள் மட்டும் எடுத்து இணைக்கப்பட்டிருக்கவேண்டும் என்று தோன்றுகிறது.

குறிப்புகள்

  1. காப்பியாறு - காவிரி ஆற்றில் வந்துசேரும் கபினி ஆறு இந்தக் காப்பியாறு ஆகலாம். காப்பியனார் - பல்காப்பியனார், தொல்காப்பியர் என்னும் புலவர்களைப் போல இவரும் காப்பியன் என்னும் பெயர் பூண்டு விளங்கிக், காப்பியனார் என்று சிறப்பிக்கப்பட்டிருக்கிறார். களங்காய்க்கண்ணி - சேர அரசர்கள் பனந்தோடு (பனைமட்டை) கொண்டு செய்த மாலையைத் தம் குடியின் அடையாள மாலையாக அணிந்துகொள்வது வழக்கம். நார்முடி - பாடல் 39-ல் விளக்கம் உள்ளது. கண்ணி என்னும் சொல் தலையில் அணியும் மாலையைக் குறிக்கும். இவன் தலை நார் போல நரைத்த முடியைக் கொண்டிருந்தது. அதனால் 'நார்முடி' என்னும் அடைமொழிப் பெயர் இவனுக்கு அமைந்தது என்று கொள்ளவும் இடம் உண்டு. எனினும் பாடலில் தெளிவான விளக்கம் இருக்கும்போது வீண் கற்பனை வேண்டாத ஒன்று.

வெளி இணைப்புகள்

பதிற்றுப்பத்து என்னும் சங்க இலக்கியத் தொகுதியில் அடங்கியுள்ள பாடல்களைக் கீழ்வரும் மின் இணைப்புகளில் காணலாம்:

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.