நரிக்குறவர்
நரிக்குறவர் (Narikuravar) எனப்படுவோர் தமிழ்நாட்டின் நாடோடி பழங்குடி சமூகம். அவர்கள் பாரம்பரிய வேட்டைக்காரர்கள் மற்றும் காட்டில் வாழ்ந்தவர்கள். அவர்களின் வாழ்வாதாரத்திற்காக மணிகள் தயாரித்தல் மற்றும் விற்பது போன்ற மாற்றுத் தொழிலை எடுத்துக் கொண்டனர்.
இவர்கள் பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் பொதுமக்கள் கூடுமிடங்களில் ஊசி, பாசி, போன்ற சிறு பொருட்களை விற்கும் தொழிலைச் செய்து வருகின்றனர். நரிக்குறவர் சித்தமருத்துவம், இயற்கை மருத்துவம் அறிந்தவர்கள். நாடி பார்த்து நோய்க்குறி சொல்லுவார்கள்.
நரிக்குறவர் மக்களை பழங்குடி மக்கள் பட்டியலில் சேர்ப்பதற்கு இந்திய நடுவண் அரசின் அமைச்சரவை முடிவு செய்துள்ளது.[1]
வரலாறு
விரிவான ஆராய்ச்சி நரிக்குறவர் மீது நடக்கிறது. நரிக்குறவர் வரலாற்றை மானுடவியல் துறை அதிகாரப்பூர்வமாக வெளியிடும்.
வேறு சில சமூக மக்கள் நரிக்குறவர் பற்றி தவறான தகவல்களை கொடுக்க முயற்சிக்கின்றனர். அவர்கள் வேண்டுமென்றே நரிக்குறவர் சமூகப் பெயரை நரிக்காரன் என்று அவர்கள் வெளியிட்டனர்
எனவே நரிக்குறவர் குறித்து ஆராய்ச்சி செய்து இந்திய அரசாங்கத்தால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். ஆர்வமுள்ள வாசகர்கள் நரிக்குறவர் மக்களிடமிருந்து கூடுதல் தகவல்களைப் பெறலாம்
வாக்ரிபோலி
தமிழ், இந்தி, மராத்தி கலவையான நரிக்குறவர் பேச்சுவழக்கு பேசுகிறது. அவர்களின் நாடோடி கலாச்சாரத்தின் காரணமாக வாக்ரி போலி என்ற புதிய மொழி உருவானது
சமூகம்
இவர்களில் பெரும்பாலானோர் படிப்பறிவு அற்றர்வர்கள். எனினும், சுகாதாரத்தில் கவனம் உடையவர்கள். காண்பதற்கு சுத்தமில்லாமல் இருந்தாலும், இவர்கள் வாழையடிவாழையாக உட்கொள்ளும் நாட்டுமருந்துகள், இவர்களின் உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கிறது. குறிப்பாக, குழந்தைகளுக்கு வயிற்றில் பூச்சிகள் வராமலிருக்க, வருடத்திற்கு ஒரு முறை தங்களது பாரம்பரிய மருந்தினைத் தருவர். ஆண்கள் துப்பாக்கிச் சுடுவதிலும், கவண்வில்லிலும் (உண்டிவில்) திறமை மிக்கவர். பெண்கள் கலை வேலைப்பாடுகளில் கைத்தேர்ந்தோர் ஆவர்.
இவர்கள் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள சாதிகள் பட்டியலில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்று அறிவிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும், நாடோடி மக்களின் இயல்பைக் கொண்டிருக்கின்றனர்.
தோற்றத்தொன்மம்
இந்த சமூக பெண்கள் கழுத்தில் வண்ணமயமான பாவாடை மற்றும் மணிகளை அணிந்திருந்தனர். ஆண்கள் நீண்ட முடியை வைத்திருப்பார்கள். இந்த மக்கள் காட்டில் வாழ்ந்தனர். அவர்கள் விலங்குகளையும் பறவைகளையும் சாப்பிடுவார்கள். வழிபாட்டு முறையில் சிவனை முழு முதற் கடவுளாகக் கொண்டாலும் (தாதாஜி) சடங்குகளில் காளி, ஈஸ்வரி, மாரியம்மன், துர்க்கை என்று பெண் கடவுளர்களுக்கே முக்கிய இடமிருக்கிறது. சடங்குகளின் அர்ப்பணிப்பு தேவியரையே சேருகிறது. அதேபோல தேவியரே குறிசொல்லும் பூசாரியில் தோன்றி சனங்களுக்குத் தீர்வு வழங்குகிறாள். நரிக்குறவர்களிடம் இருக்கும் இன்னொரு முக்கியமான வழிபாட்டு முறை – எருமைப் பலியிடல். ஒரு காலத்தில் நம் சமூகமெங்கும் பரவலாக இருந்த கொற்றவை வழிபாடும் அதனையொட்டி வரும் எருமைப் பலியிடலும் இப்பொழுது பெரும்பாலும் வழக்கொழிந்து போயிருக்கின்றன. பச்சை இரத்தம் குடிப்பதையும் மாத்திரமே தனித்துப் பார்ப்பவர்களுக்கு நரிக்குறவர்கள் காலத்தால் உறைந்துபோன காட்டுமிராண்டிகள் என்ற அபத்தக் கருத்து உருவாகலாம். ஆனால் மறுபுறத்தில் தெளிவாக உருவான குடும்ப அமைப்பு முறை, சகோதர-சகோதரி பாசம், புரிந்துணர்வு, பொருளாதரத்தைத் தாண்டி நிம்மதியான நிறைவை நாடும் மனப்பாங்கு ஆகியவை நரிக்குறவர் இனத்தை முன்மாதிரியாகக் கொள்ளத் தூண்டுகின்றன.
வாழ்வுமுறை
- நரிக்குறவர் பாரம்பரிய வேட்டைக்காரர்கள்.
- அவர்கள் வாழ்வாதாரத்திற்காக பயணித்தார்கள். அவர்கள் எல்லா மாநிலங்களிலும் உள்ள பெரிய கோயில்களுக்குச் சென்று தங்கள் மணிகளைக் கொண்ட ஆபரணங்களை விற்று சீசன் முடிந்ததும் வீடு திரும்புவார்கள்.
- பச்சை குத்துவதும் நரிகாரிகளின் தொழில்களில் ஒன்றாக இருக்கிறது.
- நரிக்குறவர் கூடாரங்களில் வசிப்பவர்கள். அரசின் முயற்சியால், இவர்களுக்கு இலவச வீடும் வீட்டுமனைப் பட்டாக்கலும் வழங்கப்படுகின்றன.
சிறப்பு
- முதியோர்கள் முக்கியத்துவம் பெறுகின்றனர். முதியோர்கள் வகுக்கும் கட்டுப்பாட்டை இவர்களில் படித்தோர் உட்பட அனைவரும் ஏற்கின்றனர்.
- திருமணத்தில் ஆண்களே, பெண்கள் குடும்பத்திற்கு பரிசப்பணம் தரவேண்டும்.
- வேற்று சமூகப் பெண்களைக் கிண்டல் கேலி செய்வதில்லை.http://domesticatedonion.net/tamil/2005/%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%95-%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81/
https://www.folkstreams.net/film-detail.php?id=184